Skip to main content

தமிழக அரசு டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பி உள்ளது! பாலகிருஷ்ணன் பேட்டி!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கலில் உள்ள கட்சி அலுலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது "அதிமுக அரசை பொறுத்தவரை இந்த பட்ஜெட் கடைசி பட்ஜெட்.  இதற்குமேல் ஆளும் கட்சியாக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்ய அதிமுக அரசுக்கு மக்கள் இடம் தரமாட்டார்கள். இந்த பட்ஜெட்டில் நிதி நிர்வாகம் இல்லை. மத்திய அரசிடம் நிதி கேட்டு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களும் அறிவிக்காத பட்ஜெட் ஆகும். கடந்த  ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் வருவாய் குறைவு செலவு அதிக அளவில் உள்ளது. சென்ற ஆண்டு பற்றாக்குறை 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 25 ஆயிரமாக அதிகரித்து இருப்பது தமிழக அரசின் மோசமான நிலையை காட்டுகிறது. 

 

cpm Balakrishnan about tamilnadu Government

 

 

மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வரக்கூடிய நிதி பங்கீடு என்பது 33 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசுக்கு மத்திய அரசின் பங்கீடு 26 ஆயிரம் கோடி தான் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்  7000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.  மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியைப் பெற தமிழக அமைச்சர்கள் யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மத்திய அரசிடம் நிதி வற் புறுத்தினால் ஊழல் செய்த அமைச்சர்கள்  மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அமைச்சர்கள் யாரும் நிதியை கேட்டுப் பெறவில்லை. 

தங்களது ஆட்சி பாதுகாப்பதை ஒன்றை மட்டுமே தமிழக அமைச்சர்கள் பிரதானமாக கொண்டுள்ளனர். மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியை கேட்டுப் பெற முடியாமல் போன காரணமாகத்தான்  தமிழக மக்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றனர். தமிழக அரசின் சொந்த வருவாயும் தற்பொழுது குறைந்துள்ளது. உலக வங்கியிடம் முதல்வர் கடன் வாங்குவதற்காக தான் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் இருக்கும் பயனளிக்க போவதில்லை. மாநில அரசின் மோசமான நிதி நிர்வாகம் தான் இந்த பட்ஜெட். தமிழக அரசு இந்த ஆண்டு வாங்கி உள்ள கடனையும் சேர்த்து 4 லட்சம் கோடி கோடியாக தமிழக மக்கள் தலை மேல் விழுந்துள்ளது. 

 

 

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்களின் வழக்கு என்பது விளையாட்டு மைதானத்தில் கால்பந்தாட்டம் போல் உள்ளது. இதை எதிர்த்து திமுக நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கில் கால வரை முறையை  உருவாக்கி சபாநாயகர் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும். சபாநாயகர் இந்த விவகாரத்தில் காலதாமத படுத்தினார் என்று சொன்னாலே முடிவு எடுப்பதில் கஷ்டம் உள்ளது என்று அர்த்தம். எதிர்த்து ஓட்டு போட்டதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பதவி பறிபோய்விடும் மற்றும் ஆட்சியும் போய்விடும் ஆகையால் தான் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தி வருவதாக தெரிகிறது. என்னைப் பொருத்தவரை உச்சநீதிமன்றம் இதற்கு கால வரைமுறை செய்து கொடுத்து இருக்கலாம்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் அரசு சொல்வதை நம்ப முடியவில்லை. டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் தேர்வு தாள்களை மாற்றியது சினிமா வினை போல் நடந்துள்ளது.  டி.என்.பி.எஸ்.சி என்பது அரசு விரும்புவார்களை கமிட்டி உறுப்பினர்களாக  போடுவது தான். குறைபாடாகும் உறுப்பினராக வருவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்துதான் பதவிக்கு வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி விவகாரத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்றால் கடைநிலை ஊழியர் மட்டும்  இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை.  கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இடைத்தரகர் ஜெயக்குமார் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்.ஏற்கனவே இது குறித்து நாங்கள் புகார் கொடுத்தும் என்று வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அப்பொழுதே ஜெயக்குமார கைது செய்திருந்தால் இதுபோல் தொடர்ந்து நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. தேர்வு முறையை தமிழக அரசு மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புக் கொள்ளாதது ஏன்?. சிபிசிஐடி அதிகாரிகள் நியாயமாக விசாரணை நடத்தினால் அவர்களை உடனடியாக இந்த அரசு இடமாற்றம் செய்து விடுகிறது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடப்பதற்கு காரணம் சமூகத்தில் உள்ள போதை பழக்கம் தான். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறிய அரசு  500 கடைகளை மூடியது. அதன் பின் கடைகளை மூட வில்லை. தமிழகத்தில் கஞ்சாவும் போதை பழக்கமும் அதிகளவில் உள்ளது. தமிழக அரசுக்கு ஒரே வருமானம் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் அரசு மதுபானக்கடை தான். அதன் மூலமாகத்தான் அதிக வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்த பேட்டியின்போது திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம். முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டி உள்பட நகர ஒன்றிய பொறுப்பில் உள்ள சிலர் கலந்து கொண்டனர்

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.