Skip to main content

தமிழக அரசு டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பி உள்ளது! பாலகிருஷ்ணன் பேட்டி!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கலில் உள்ள கட்சி அலுலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது "அதிமுக அரசை பொறுத்தவரை இந்த பட்ஜெட் கடைசி பட்ஜெட்.  இதற்குமேல் ஆளும் கட்சியாக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்ய அதிமுக அரசுக்கு மக்கள் இடம் தரமாட்டார்கள். இந்த பட்ஜெட்டில் நிதி நிர்வாகம் இல்லை. மத்திய அரசிடம் நிதி கேட்டு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களும் அறிவிக்காத பட்ஜெட் ஆகும். கடந்த  ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் வருவாய் குறைவு செலவு அதிக அளவில் உள்ளது. சென்ற ஆண்டு பற்றாக்குறை 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 25 ஆயிரமாக அதிகரித்து இருப்பது தமிழக அரசின் மோசமான நிலையை காட்டுகிறது. 

 

cpm Balakrishnan about tamilnadu Government

 

 

மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வரக்கூடிய நிதி பங்கீடு என்பது 33 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசுக்கு மத்திய அரசின் பங்கீடு 26 ஆயிரம் கோடி தான் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்  7000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.  மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியைப் பெற தமிழக அமைச்சர்கள் யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மத்திய அரசிடம் நிதி வற் புறுத்தினால் ஊழல் செய்த அமைச்சர்கள்  மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அமைச்சர்கள் யாரும் நிதியை கேட்டுப் பெறவில்லை. 

தங்களது ஆட்சி பாதுகாப்பதை ஒன்றை மட்டுமே தமிழக அமைச்சர்கள் பிரதானமாக கொண்டுள்ளனர். மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியை கேட்டுப் பெற முடியாமல் போன காரணமாகத்தான்  தமிழக மக்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றனர். தமிழக அரசின் சொந்த வருவாயும் தற்பொழுது குறைந்துள்ளது. உலக வங்கியிடம் முதல்வர் கடன் வாங்குவதற்காக தான் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் இருக்கும் பயனளிக்க போவதில்லை. மாநில அரசின் மோசமான நிதி நிர்வாகம் தான் இந்த பட்ஜெட். தமிழக அரசு இந்த ஆண்டு வாங்கி உள்ள கடனையும் சேர்த்து 4 லட்சம் கோடி கோடியாக தமிழக மக்கள் தலை மேல் விழுந்துள்ளது. 

 

 

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்களின் வழக்கு என்பது விளையாட்டு மைதானத்தில் கால்பந்தாட்டம் போல் உள்ளது. இதை எதிர்த்து திமுக நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கில் கால வரை முறையை  உருவாக்கி சபாநாயகர் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும். சபாநாயகர் இந்த விவகாரத்தில் காலதாமத படுத்தினார் என்று சொன்னாலே முடிவு எடுப்பதில் கஷ்டம் உள்ளது என்று அர்த்தம். எதிர்த்து ஓட்டு போட்டதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பதவி பறிபோய்விடும் மற்றும் ஆட்சியும் போய்விடும் ஆகையால் தான் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தி வருவதாக தெரிகிறது. என்னைப் பொருத்தவரை உச்சநீதிமன்றம் இதற்கு கால வரைமுறை செய்து கொடுத்து இருக்கலாம்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் அரசு சொல்வதை நம்ப முடியவில்லை. டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் தேர்வு தாள்களை மாற்றியது சினிமா வினை போல் நடந்துள்ளது.  டி.என்.பி.எஸ்.சி என்பது அரசு விரும்புவார்களை கமிட்டி உறுப்பினர்களாக  போடுவது தான். குறைபாடாகும் உறுப்பினராக வருவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்துதான் பதவிக்கு வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி விவகாரத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்றால் கடைநிலை ஊழியர் மட்டும்  இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை.  கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இடைத்தரகர் ஜெயக்குமார் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்.ஏற்கனவே இது குறித்து நாங்கள் புகார் கொடுத்தும் என்று வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அப்பொழுதே ஜெயக்குமார கைது செய்திருந்தால் இதுபோல் தொடர்ந்து நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. தேர்வு முறையை தமிழக அரசு மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புக் கொள்ளாதது ஏன்?. சிபிசிஐடி அதிகாரிகள் நியாயமாக விசாரணை நடத்தினால் அவர்களை உடனடியாக இந்த அரசு இடமாற்றம் செய்து விடுகிறது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடப்பதற்கு காரணம் சமூகத்தில் உள்ள போதை பழக்கம் தான். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறிய அரசு  500 கடைகளை மூடியது. அதன் பின் கடைகளை மூட வில்லை. தமிழகத்தில் கஞ்சாவும் போதை பழக்கமும் அதிகளவில் உள்ளது. தமிழக அரசுக்கு ஒரே வருமானம் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் அரசு மதுபானக்கடை தான். அதன் மூலமாகத்தான் அதிக வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்த பேட்டியின்போது திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம். முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டி உள்பட நகர ஒன்றிய பொறுப்பில் உள்ள சிலர் கலந்து கொண்டனர்

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.