Skip to main content

அரசுப் பேருந்தின் முதல் பெண் நடத்துநர் இளையராணி! ''வாய்ப்பு கிடைத்தால் எல்லா துறைகளிலும் சாதிப்போம்!''

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Junior Queen is the first female driver of a government bus! "If given the chance, we will succeed in all fields!"

 

கல்பனா சாவ்லாக்களும், சுனிதா வில்லியம்ஸூகளும் விண்வெளி பயணம் வரைச் சாதித்து விட்டாலும்கூட, நம்ம ஊர்களில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வரும் பெண்களை வியப்பாகப் பார்க்கும் மனோபாவம் என்னவோ இன்னும் மாறவேயில்லை. இந்த பாகுபாடு என்பது என்பது ஆண்களிடம் மட்டுமே உள்ளதாகச் சொல்லிவிட இயலாது; ஒட்டுமொத்த இந்திய பொதுச்சமூகத்தின் பார்வையும் கூட, இது ஆணுலகம்; இது பெண்ணுலம் என்றே பிளவுபடுத்தி வைத்திருக்கிறது.

 

சில துறைகள் இன்னும் ஆண் மையச் சூழலில்தான் இருந்து வருகிறது. பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் பணிகள் எல்லாம் காலம்காலமாக ஆணுலகம் சார்ந்தது என்ற கருத்தாக்கம் இருந்து வருகிறது. இந்த மரபை, தடாலடியாக உடைத்துப் போட்டிருக்கிறார், இளையராணி என்னும் 34 வயது குடும்பத் தலைவி. 

 

ஆமாம். ராசிபுரம் & சேலம் (எண்.: 52) வழித்தடத்தில் செல்லும் அரசு நகரப் பேருந்தில் நடத்துநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் இளையராணி. சேலம் கோட்டத்தில், அரசுப் பேருந்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நடத்துநர் என்ற பெருமை இவருக்கு உண்டு. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பழனியப்பன் புதூரைச் சேர்ந்தவர். 

 

இவருடைய தந்தை முனியப்பன், ராசிபுரம் பணிமனையில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி வந்தார். பணிக்காலத்திலேயே அவர் இறந்து விட்டதால், வாரிசு அடிப்படையில் இளையராணிக்கு நடத்துநர் பணி வழங்கி இருக்கிறது தமிழக அரசு. இவருடைய கணவர், குமார். தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

 

இது தொடர்பாக இளையராணி கூறுகையில், ''எங்கள் தந்தை முனியப்பன் கடந்த 2010- ஆம் ஆண்டு பணியில் இருக்கும்போதே இறந்து விட்டார். என் தம்பி இளையராஜா. அவர், படித்துக் கொண்டிருந்ததால், வாரிசு அடிப்படையில் வேலைவாய்ப்பு கேட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விண்ணப்பித்து இருந்தேன். என்னைப் போல 10 பேர் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். எனக்கு நடத்துநர் பணி கிடைத்தது. 

 

கடந்த ஒரு மாதமாக ராசிபுரம் பணிமனைக்கு உட்பட்ட ராசிபுரம் - சேலம் வழித்தட அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறேன். அதிகாலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தொடர்ச்சியாகப் பேருந்துக்குள் அங்குமிங்கும் நடந்தபடி பயணச்சீட்டை வழங்குவது, பேருந்து நிறுத்தங்களில் பயணிகளுக்கு அழைப்பு விடுப்பது எனச் சுறுசுறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் போய்க் கொண்டிருக்கிறது. 

 

இந்தப் பணிக்காக எனக்கு ஒரு மாதம் பயிற்சி கொடுத்தனர். ஆரம்பத்தில், பயணிகளிடம் காசை வாங்கிப்போட்டு, அதற்கு டிக்கெட் கிழித்துக் கொடுத்து, கணக்குவழக்கை எல்லாம் சரிபார்த்து, அதை அதிகாரிகளிடம் ஒப்படைப்பது எனக் கொஞ்சம் சவாலாகத்தான் தெரிந்தது. போகப்போக எல்லாமே எளிமையாகி விட்டது. 

 

எந்த வேலையாக இருந்தாலும் ஆண், பெண் எனப் பேதம் பார்க்கத் தேவையில்லை. பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்களும் எல்லா துறைகளிலும் சாதிப்பார்கள்'' என்கிறார் இளையராணி. 

 

'எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி' என முழங்கிய புரட்சிப்பாவலன் பாரதியின் கூற்றை மெய்ப்பித்திருக்கிறார் இளையராணி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.