கொடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிடமாற்றம்!

Judge who was hearing the Kodanadu case has been transferred!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா, தேனி முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் சுமார் 58 நீதிபதிகளைப் பணியிடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பணியிடமாற்றம் செய்யப்பட்டதில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபாவும் ஒருவர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த இவர், வழக்கில் சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

ஆனால், சில நிர்வாகக் காரணங்களுக்காக நீதிபதி சஞ்சய் பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை தொழிற்சாலை தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

court incident Judge
இதையும் படியுங்கள்
Subscribe