Skip to main content

நீதிபதிகளுக்கு எதிரா போஸ்டர் ஒட்டினா கண்டுக்க மாட்டீங்க... உங்களை பற்றி ஒட்டினால் உடனே கைதா? போலீசாருக்கு நீதிபதி கேள்வி

Published on 05/03/2018 | Edited on 05/03/2018
baskaran poster


தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், சின்னமனூர், பாளையம், கூடலூர் போன்ற பகுதிகளில் தேனி மாவட்ட காவல் துறையை கண்டிக்கிறோம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ஆயுதபடை  இன்ஸ்பெக்டர் சீனிவாசன் படங்களை போட்டு தென்னிந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாணவ அணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. 
 

இப்படி திடீரென எஸ்பியை கண்டித்து அவதூறு போஸ்டர் அடிப்பதற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எஸ்.பி. இங்கு வந்ததிலிருந்தே தனது சாதிகாரங்களுக்கு முக்கியதும் கொடுத்து கேட்கும் ஸ்டேஷன்களுக்கு டிரான்ஸர் போட்டு கொடுக்கிறரர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து  வந்தது.

 

baskaran


இந்த நிலையில்தான் ஆயுத படையில் இருக்கும் ஆய்வாளர் சீனியும், எஸ்.பி. இருக்கும் தைரியத்தில் தனக்கு கிழ் உள்ள காவலர்களை சாதி ரீதியாகவும் ஓரங்கட்டி வந்தரர். இதை எஸ்பியும் கண்டுகொள்ளவில்லை. அதனுடைய அதிருப்தியில்தான் இப்படி ஒரு கண்டன போஸ்டரை ஒரு சமூகத்தை மாணவ அமைப்பினர் ஒட்டி இருக்கிறார்கள்.
 

இதனால் டென்ஷன் அடைந்த காக்கிகள் அந்த அவதூறு போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுரேஷ், மகேஸ்வரன், சம்சுதீன் ஆகியோர் தான் எஸ்.பி.யை பற்றி இப்படி ஒரு அவதூறு போஸ்டர் ஒட்டினார்கள் என்று தெரிந்ததின்பேரில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இப்படி கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் பாளையம் சார்பு நீதிபதியான அருள்  இளங்கோ முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 

ஆனால் நீதிபதியோ உடன் வந்த போலீசாரை பார்த்து, நீதிபதிகளை கண்டித்து போஸ்டர் ஒட்டி இருந்தால் கண்டுக்க மாட்டீங்க, உங்களை பற்றி  ஒட்டினால் உடனே கைது பண்ணி உள்ளே போட சொல்லுகிறீர்கள். இது என்ன நியாயம் என போலீசாரை எச்சரித்து விட்டு அந்த மூன்று பேரையும் நீதிபதி  சொந்த ஜாமினில்  விடுதலை செய்தார். இச்சம்பவம்  மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

சக்தி

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.