Skip to main content

சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி மாற்றம்...  அச்சம் கொள்ள தேவையில்லை-! மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
Judge change in sathankulam case ... No need to fear! Senior Attorney PB Mohan

 

சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று திடீரென்று அந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டார் என்ற செய்தி வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் தமிழ்நாட்டில் உயர்நீதிமன்ற பிரிவு என்ற அடிப்படையில் மதுரையில் பணியாற்ற கடமைப்பட்டுள்ளார்கள். அதில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமான நடைமுறையில் மாற்றப்படுவதுதான், அப்படி  மாற்றப்பட்டவர்தான்  நீதிபதி பிரகாஷ். 

 

Judge change in sathankulam case ... No need to fear! Senior Attorney PB Mohan

 

தற்போது இந்த சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து நீதிபதி பிரகாஷ் உள்ளிட்ட அமர்வு இந்த விஷயத்தில் நியாயத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் வருகிறது. ஆனால் தற்போது நீதிபதிகள் மாற்றம் என்ற செய்தி இரு வேறு கோணத்தில் மக்கள் மத்தியில் செல்கிறது. உண்மையில் நீதிபதிகள் மாற்றம் என்பது வழக்கமான நடைமுறைதான். சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த தந்தை, மகன் இருவருக்கும் நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்து இருப்பது ஒன்றுதான்.

இதில் நீதிபதி பிரகாசம் மாற்றத்தினால் எதுவும் நிகழாது. அடுத்து வருகிற எந்த நீதிபதி யாராக இருந்தாலும் ஏற்கனவே இந்த சம்பவத்தில் அடிக்கோடிட்ட மாதிரி சம்பந்தப்பட்ட பிரச்சனை வெளிவந்துவிட்டது. அதன் தொடர்ச்சியே தமிழகம் முழுக்க இன்று தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில் நீதிபதி மாற்றம் சம்பந்தமாக நாம் மூத்த வழக்கறிஞர் பவானியை சேர்ந்த ப.பா.மோகன் அவரிடம் பேசினோம். இதுகுறித்து அவர் கூறியதாவது, 

 

Judge change in sathankulam case ... No need to fear! Senior Attorney PB Mohan

 

“உயர்நீதிமன்ற நீதிபதி  பிரகாஷ் மாற்றம் என்பது வழக்கமான நடைமுறைதான். இந்த வழக்கில் தானாக முன்வந்து மதுரைக்கிளை வழக்கினை எடுத்தபொழுது, அதன்பிறகு அந்த வழக்கின் திசை மாறுபட்டு சம்பந்தப்பட்ட காவலர்கள் மேல் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது. அதில் கீழமை நீதிமன்றத்தில் இருந்த மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முதன்முதலில் அந்த காவல் நிலையத்தில் இருந்த பெண் தலைமை காவலர் ரேவதியிடம் வாக்குமூலம் வாங்கினார். இது நிகழாது என மறைமுக பின்னணி இருந்தது ஆனால் நிகழ்ந்தது. வேறுவழியே இல்லாமல் நீதிமன்றம் அதை பதிவு செய்தது. தற்போது வரை இந்த வழக்கு தொடர்ச்சியாக சரியான பாதையில் சென்று வருகிறது. இந்த நீதிபதி மாற்றப்பட்டாலும் வேறு எந்த நீதிபதி இந்த அமர்வுக்கு வந்தாலும் இதன் திசை மாறாது. ஆகவே முன்பு இருந்த நீதிபதி இந்த வழக்கில் இருந்து மாற்றப்பட்டார் என்ற அச்சம் மக்களுக்கு தேவையில்லை. வருகிற நீதிபதி புலன் விசாரணை, சாட்சியம் உள்ளிட்ட ஆகிய விஷயங்களை சரியாக ஆய்வு செய்து வழக்கு சென்றால் வழக்கின் தன்மை நேராகச் செல்லும்.

இதில் குறிப்பிடத்தகுந்த மிக முக்கியமான விஷயம் குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபொழுது பெஸ்ட் பேக்கரி என்ற பேக்கரி எரிப்பு வழக்கில் பலர் பேர் கொல்லப்பட்டார்கள். அதில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது, அந்த உத்தரவுப்படி, அரசு வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களோடு ஒரு மூத்த வழக்கறிஞரை நியமித்து அவர் மூலமாக அறிக்கை கேட்டது. அதனடிப்படையில் பெஸ்ட் பேக்கரி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் இந்த வழக்கிலும் அரசுக்கு ஆதரவு நிலை இல்லாத ஒரு மூத்த வழக்கறிஞரை நியமித்து விசாரணையை தொடங்கினால் இந்த வழக்கின் உண்மையான முகம் வெளிப்படும். ஆகவே சாத்தான்குளம் விஷயத்தில் யார், யார் குற்றவாளி என்பதை விசாரணை முடிவில், நீதிமன்ற உத்தரவின் கோணத்தில்தான் பார்க்க வேண்டும். இதில் உயர் நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டார் என்ற வாதம் எல்லாம் தேவையில்லை.

தற்போது உள்ள நீதிபதி வழக்கமான நடைமுறையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார். வருகின்ற நீதிபதி இந்த புலன் விசாரணையில் இருந்து செயல்படுவார் என்கின்ற நம்பிக்கை மனிதநேயமுள்ள வழக்கறிஞர்கள் மத்தியில் உள்ளது. மக்கள் இதில் ஏதோ நிகழ்ந்துவிட்டது என்று என்ற அச்சம் கொள்ள வேண்டாம்” எனக் கூறினார் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Holiday notification for Chennai High Court

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு அமர்வுகளுக்கும் விடுமுறை நாள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.