Skip to main content

“அன்று ஜாலியோ ஜாலி! வாழ்க்கை இன்று காலியோ காலி!” நிர்மலாதேவி வழக்கு நீதிமன்ற காவலில் புலம்பலோ புலம்பல்!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

 

 

வி.ஐ.பிக்களின் பாலியல் தேவைகளுக்கு கல்லூரி மாணவிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கெட்ட நோக்கத்துடன் பேசிய நிர்மலாதேவி, தூண்டுகோலாக இருந்த  பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் கைதாகி மதுரை சிறையில் அடைபட்டிருக்கின்றனர்.  

சிறைவாசிகளிடம் கருப்பசாமியும் முருகனும் “ஜாலியாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு யாருக்குத்தான் இல்லை. நாங்களும் அப்போது அந்த மனநிலையில்தான் இருந்தோம். ஆனால், இந்த அளவுக்கு அவமானப்பட்டு சிறைக்கெல்லாம் செல்வோம் என்று கனவிலும் நினைத்ததில்லை. தவறான வழியில் அடையும் தற்காலிக சந்தோஷம், நிரந்தரமாக நிம்மதி இல்லாமல் பண்ணிவிடும் என்ற உண்மை பட்டபிறகுதான் தெரிகிறது.” என்று வருந்துகிறார்களாம்.  


 

"Jolly Jolly on that day! Life is empty today! "Nirmaladevi case in court custody lamenting lamentation!


 

நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண்-2 இல் முருகனும் கருப்பசாமியும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். ஜூலை 24-ம் வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறார் நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி. பிறகென்ன? சிறையில் மீண்டும் புலம்ப வேண்டியதுதான்! 

 

"Jolly Jolly on that day! Life is empty today! "Nirmaladevi case in court custody lamenting lamentation!




பெண்ணாக இருந்தாலும், இன்றைய உலகில் படித்தால்தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து பெற்றோர் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களின் குடும்ப வறுமையைத் தெரிந்துகொண்டு, “நாங்கள் சொன்னபடி கேட்டால், உங்கள் வாழ்க்கை ஓஹோவென்றாகிவிடும்” என்று ஆசைத்தீயை மூட்டி, அனுபவிக்கத் துடித்ததும், தாத்தாக்கள் மற்றும் ஹை - அஃபிசியல்ஸின் படுக்கையறைக்கு அனுப்புவதற்கு ஆலாய்ப் பறந்ததும், சாதாரண குற்றமா? இத்தகையோருக்காகத்தான், உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும் என்ற பழமொழியை எப்போதோ உருவாக்கி வைத்துவிட்டார்கள் நம் முன்னோர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.