Skip to main content

சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்ட காவிரி குடிநீர் நிறுத்தம்...

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

கடந்த ஜனவரி முதலே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரம், குடிக்க, குளிக்க என எதற்கும் தண்ணீரில்லாமல் தத்தளித்தது. சென்னை மக்களின் நீர் பற்றாக்குறையை போக்க முடிவு செய்த தமிழக அரசு காவிரி நீரை சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது.

 

jolarpetta water supply stopped

 

 

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து இரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதற்காக தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த திமுக ஆட்சியில், ஓக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்துக்கு ராட்சச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

அந்த தண்ணீரை ஜோலார்பேட்டை அருகில் ராட்சச தொட்டியில் சேமித்து, அங்கிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு கடந்த இரண்டு மாதங்களாக அனுப்பப்பட்டு வந்தது. இதுவரை 158 முறை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் ரயில் வேகன் மூலமாக சென்றது. இதன் மூலம் சென்னை மக்களின் தண்ணீர் பற்றாக்குறை ஓரளவு தீர்ந்துள்ளது. 

தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஜோலார்ப்பேட்டையில் இருந்து இரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட குடிநீர் அக்டோபர் 8ந்தேதியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 159 முறை இரயில் மூலம் தண்ணீர் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 39.25 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ad

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.