Skip to main content

மணல் திருடர்களுடன் கூட்டு... மதுபோதையில் வாக்கி டாக்கியைப் பறிகொடுத்த தலைமைக் காவலர்!

Published on 25/09/2021 | Edited on 27/09/2021

 

Joint with sand thieves ... Chief Constable who snatched a walkie talkie under the influence of alcohol!

 

மணல் திருடர்களுடன் கூட்டு சேர்ந்து மது குடித்த இடத்தில் வாக்கி டாக்கியை மணல் திருடர்களிடமே பறிகொடுத்துவிட்டு மது போதையில் விழுந்து எழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தலைமைக் காவலர். தலைமைக் காவலருக்கு மது ஊற்றிக் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த வாக்கி டாக்கியைத் திருடிய 4 மணல் திருடர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் தலைமைக் காவலர் அன்பழகன். இவர், அப்பகுதி மணல் திருடர்களிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பவர். சம்பவ நாளிலும் சில மணல் திருடர்களிடம் பேசியுள்ளார். யாரும் இவரைக் கவனிக்கவில்லை. அதன் பிறகு வழக்கமாக சிக்காத திருட்டு மணல் வாகனம், சம்மட்டி விடுதி காவல் எல்லையில் சிக்கிக்கொண்டது. அதன் பிறகு சிறிது நேரத்தில் தலைமைக் காவலர் அன்பழகனை ஒரு பேக்கரிக்கு அருகே வரச்சொல்லி அழைத்த மணல் திருடும் கும்பல், “உங்களுக்கு மாமூல் கொடுக்கவில்லை என்று எங்கள் வாகனத்தைச் சிக்கவைத்துவிட்டீர்கள். நீங்களே மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்டவர்கள், கூடவே மது விருந்தும் நடத்தியுள்ளனர். மது போதை அதிகமான நேரத்தில் மணல் வாகனம் மீட்கப்படாமல் போனதால் காவல்துறையிடம் இருந்த வாக்கி டாக்கியை அவருக்கே தெரியாமல் திருடி வைத்துக்கொண்டனர்.

 

வாக்கி டாக்கி திருடப்பட்டது தெரியாமல் அங்கிருந்து சென்ற தலைமைக் காவலர் அன்பழகன், மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றித் தெரியாத கீரனூர் காவல் நிலைய காவல்துறையினர் அன்பழகனைத் தேடிக் கண்டுபிடித்து வாக்கி டாக்கி பற்றி கேட்க, அதன் பிறகே வாக்கி டாக்கி காணாமல்போனது தெரிந்திருக்கிறது தலைமைக் காவலருக்கு. உடனே அன்பழகனை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், அவருடன் மது குடித்த 4 பேரைத் தேடிப் பிடித்து விசாரித்தபோது, சம்மட்டி விடுதியில் பிடிபட்ட மணல் வாகனத்தை மீட்பதற்காக அன்பழகனை அழைத்துச் சென்றோம். ஆனால் வாகனத்தை மீட்டுத்தரவில்லை. அதனால் எங்களுடன் சேர்ந்து மது குடிக்க வைத்து அவரிடம் இருந்த வாக்கிடாக்கியை அவருக்கே தெரியாமல் திருடி பெங்களூருவில் ஒரு குவாரி மணலில் புதைத்து வைத்திருப்பதாகக் கூறி வாக்கி டாக்கியை எடுத்துக் கொடுத்துள்ளனர். 

 

சம்பவம் குறித்து கீரனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷின் புகாரின் பேரில் மாத்தூர் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வழக்குப் பதிவுசெய்து இன்பசுரேஷ், முகேஷ் கண்ணன், சீனிவாசன், செந்தில் ஆகிய நான்கு பேரை கைது செய்தார். இதில் முகேஷ் கண்ணன், அதிமுக ஐ.டி. விங்க் பிரமுகராவார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்