Skip to main content

ஜேடர்பாளையம் பெண் கொலை வழக்கு; சிபிசிஐடி போலீஸ் விசாரணை தொடங்கியது!

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Jodarpalayam woman case CBCID start's investigation

 

பரமத்தி வேலூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற பட்டதாரி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம் அருகில் உள்ள வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தன் மனைவி நித்யா (28). பி.காம்., (சிஏ) பட்டதாரியான இவர், கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஆடு மேய்க்கச் சென்றிருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். நித்யா கொலை வழக்கில், வெல்ல தயாரிப்பு ஆலைகளில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் மூன்று பேருக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர்களிடம் விசாரிக்கக் கோரியும் நித்யா குடும்பத்தினர் தரப்பில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

இந்த கொலைக்குப் பிறகு, வீ.கரப்பாளையம், சரளைமேடு, வி.புதுப்பாளையம் பகுதிகளில் சிலரின் வீடுகள், ஆலை கொட்டகைகள், டிராக்டர் மீது மர்ம நபர்கள் தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மே 13 ஆம் தேதி அதிகாலை, அதே பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆர் என்கிற முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான கரும்பாலையில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் (19) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

 

இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்பிக்கள் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குற்றத்தடுப்புச் செயல்களில் கோட்டை விட்டதாக அந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாவட்ட எஸ்பி கலைச்செல்வன், பரமத்தி வேலூர் டிஎஸ்பி கலையரசன், திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமி ஆகியோர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க, நித்யா கொலை வழக்கை உள்ளூர் காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து, ஜேடர்பாளையம் காவல்நிலையத்தில் இருந்து நித்யா கொலை வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன.

 

தற்போது சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பிரபா, நித்யா கொலை குறித்து புதிதாக வழக்குப்பதிவு செய்து, மே 22 ஆம் தேதி முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளார்.  முதல்கட்டமாக நித்யாவின் கணவர் விவேகானந்தன் அவருடைய அண்ணன் பூபதி மற்றும் சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அவர்கள் அளித்த வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.