நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டதோடு, வாகன உற்பத்தியையும் நாளுக்கு நாள் குறைத்து வருகின்றனர். மேலும் ஆட்டோமொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உற்பத்தியை குறைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஊழியர்களுக்கு விடுமுறையும் அளித்து வருகின்றனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தி தாளில் வந்த விளம்பரம் ஒன்றில் படித்த இளைஞர்களை அதிர வைத்துள்ளது. அதில் சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் இளநீர் கடையில் இளநீர் சீவுவதற்கு ஆள் தேவை என்றும், அதற்கு சம்பளமாக அனுபவித்திற்கு ஏற்ப 22000 முதல் 32000 வரை சம்பளம் தரப்படும் என்று அறிவித்து இருந்தனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த விளம்பரத்தில் 51/31, பீமன்னா முதல் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை, தொடர்பு கொள்ளவேண்டிய மொபைல் எண்: 9840824174 என்றும் கொடுத்துள்ளனர். இந்த விளம்பர தகவலை பற்றி கேட்க போன் செய்த போது "திங்கள்கிழமை நேர்ல வாங்க சார், அந்த விளம்பரம் உண்மை தான்" என்று கடை உரிமையாளர் கூறினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த நிலையில் செய்தி தாளில் வந்த விளம்பரம் ஒன்றில் படித்த இளைஞர்களை அதிர வைத்துள்ளது. அதில் சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் இளநீர் கடையில் இளநீர் சீவுவதற்கு ஆள் தேவை என்றும், அதற்கு சம்பளமாக அனுபவித்திற்கு ஏற்ப 22000 முதல் 32000 வரை சம்பளம் தரப்படும் என்று அறிவித்து இருந்தனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த விளம்பரத்தில் 51/31, பீமன்னா முதல் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை, தொடர்பு கொள்ளவேண்டிய மொபைல் எண்: 9840824174 என்றும் கொடுத்துள்ளனர். இந்த விளம்பர தகவலை பற்றி கேட்க போன் செய்த போது "திங்கள்கிழமை நேர்ல வாங்க சார், அந்த விளம்பரம் உண்மை தான்" என்று கடை உரிமையாளர் கூறினார்.
Show comments