Skip to main content

கடலூர் பாமக வேட்பாளரை ஆதரித்து பேசிய தமாகா தலைவர் வாசன்! பாமக ஆர்வம் காட்டாததால் அதிருப்தி!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

அதிமுக கூட்டணியில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் நேற்று இரவு கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் பேச வந்ததால்  அதிமுக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் கொடி பிடித்தபடி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஜி.கே.வாசன் வருகைக்காக கூடியிருந்தனர். ஆனால் வேட்பாளர் கட்சியான பா.ம.கவை சேர்ந்த கட்சி தொண்டர்களோ,  கட்சிக்கொடிகளோ வாசன் வரும் வரை அவ்விடத்தில் இல்லை. மேலும்   வேட்பாளர் கோவிந்தசாமியும்  அவ்விடத்திற்கு வரவில்லை அதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு ஜி.கே.வாசன் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் வந்து சிறிது நேரம் வாகனத்திற்கு உள்ளே அமர்ந்தபடி வேட்பாளர் வருகைக்காக காத்திருந்தார்.

 

 

நேரம் கடக்கவே ஜி.கே.வாசன் பேசத் தொடங்கி கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் பெயரை கூறிக் கொண்டிருந்த பொழுது வேட்பாளர் கோவிந்தசாமி வந்து பிரச்சார வாகனத்தில் ஏறி வாசனுடன் நின்றார். பா.ம.க கட்சிக் கொடி மற்றும் வேட்பாளர் காலதாமத வருகையால்  த.மா.கா மற்றும் கூட்டணி கட்சியினர் குழப்பமடைந்தனர்.

 

 

jk vasan cuddalore election campaign

 

 

பின்னர் பேசிய  ஜிகே வாசன் "இந்த தேர்தலிலே ஒரு நல்ல கூட்டணியை அதிமுக ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிற பா.ஜ.க  கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு  காரணம், இன்றைய இந்திய மக்களுடைய தேவை இந்தியாவுடைய நலன், பாதுகாப்பு, வளர்ச்சி, ஒற்றுமை,  ஒருமைப்பாடு. நாட்டை காக்க கூடிய வல்லமை பெற்ற ஒரு அரசு இந்தியாவிற்கு தேவை. அந்தத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அரசு பாரதிய ஜனதா அரசு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.  நமக்கு நாடும்,  நாட்டு மக்களும்தான் முக்கியம். இதைவிட முக்கியம் வேறு எதுவும் கிடையாது என்பதாலேயே ஒத்த கருத்தில் இணைந்திருக்கிறோம்.

 

 

 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இனி உங்களிடம் தமிழக மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.

 

 

  

மதவாதத்தை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இனிமேல் இந்தியாவில் தகுதியே கிடையாது.  தமிழகம் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒன்பது நாடாளுமன்றத் தொகுதியை பெற்றதில் ஒரு இஸ்லாமியரையோ,  கிருத்துவரையோ வேட்பாளராக நிறுத்த முடியாத கட்சியாக இன்றைக்கு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் மதவாதத்தின் பெயரிலே மக்களை ஏமாற்றக்கூடிய கூட்டணி,  திமுக - காங்கிரஸ் கூட்டணி.

 

 

 

இவைகளை முறியடிக்கக் கூடிய தேர்தல் தான் இந்த தேர்தல். இந்த தேர்தலிலே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை. சாதி, மதம்,  இனம்,  மொழி,  பிராந்தியம் இவைகள் எல்லாம் தாண்டி மக்களுடைய வளர்ச்சியும், நலனும்தான் முக்கியம். இதன் அடிப்படையில் தான் நாடு வளரும் முன்னேறும்.  இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கூட்டணிதான் அ.தி.மு.க கூட்டணி. 

 

 

 

 

இனி வரும் காலங்களில் தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமல்ல,  இந்தியாவில் உள்ள  பல்வேறு மாநிலங்களின் வளர்ச்சிக்கும்  ஒத்த கருத்துடைய ஆட்சிகள் அமைய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.