தூத்துக்குடியில் நடக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 13பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று தமிழக உள்துறை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இணையம் செயல்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது. அதில்,
ADVERTISEMENT
ADVERTISEMENT
‘அரசாங்க அறிவுரையின்படி இன்டர்நெட் சேவைகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 27th May 23:59 hrs. வரை தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இந்த பகுதிகளில் பயணம் செய்ய நேரிட்டால் உங்களால் இன்டர்நெட் சேவைகள் பயன்படுத்த இயலாது.’ இவ்வாறு உள்ளது, இந்த செய்தி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Show comments