Advertisment

போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தம்... மோடி - ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பு

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Advertisment

modi xi

இரவு உணவு விருந்து முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இந்த ஆலோசனைக்குப் பிறகு சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார் பிறகு அவரும் கோவளம் புறப்பட்டு சென்றார்.

இரண்டுவது நாளான இன்று சீன அதிபரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கோவளத்தில் சந்திக்க உள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதன்காரணமாக சீன அதிபர் தங்கியிருக்கும் சோழா ஹோட்டல் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோவளம் சோழிங்கநல்லூர் பகுதியில் வாகனங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை கஸ்தூரிபாய், இந்திரா நகர், திருவான்மியூர் நிலையங்களில் பறக்கும்ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது

நேற்று இரவே கிண்டி டூ ஓ.எம்.ஆர் சாலை மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் உருவானது குறிப்பிடத்தக்கது.

mahabalipuram modi xi jinping
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe