Skip to main content

ஜிமிக்கியை பரிசாக கொடுத்த காதலன்... காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்!!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

jimikki kammal

 

 

கரோனா காலமாக இருப்பதால் வேலை, வருமானம் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வீட்டில் ஆட்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கதவுகளை பாதுகாப்பாக பூட்டியிருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

 

இருப்பினும் சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போலீஸ் நிலையங்களின் எல்லை பகுதியில் அடிக்கடி பூட்டிய வீடுகளில் நகை மற்றும் பொருட்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. திருட்டு சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யலாம் என போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ஆய்வு செய்தனர். கேமராவில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

கேமராவில் வந்த அடையாளத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர் கைது செய்தனர். 

 

கைது செய்யப்பட்ட அந்த நபர் மேகநாதன். 34 வயதாகும் அவர் சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர். பூட்டிய வீடுகளில் நகை, பொருட்களை திருடி அதனை விற்றது தெரிய வந்தது. அந்த பணத்தில் அவர் தனது காதலிக்கு ஜிமிக்கி வாங்கி கொடுத்திருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். அந்த காதலி யார் என்று போலீசார் கேட்டு தெரிந்து, அவருடைய காதலியிடம் சென்று, நடந்த விவரங்களைச் சொல்லி, உங்கள் காதலன் திருடிய நகை, பொருட்களை விற்றுத்தான் இதனை வாங்கி தந்துள்ளார் என்று கூறி, அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளம்பெண் கொடூரக் கொலை; திருமணமான பிறகும் காதலியை விட மறுத்த காதலன்!

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 lover who refused to let go of his girlfriend even after marriage

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பொன்காடு ஆனந்தவல்லிபுரம் வாய்க்கால் தென்கரை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவமனை சமையலர் சிவகுமார் - கோவிந்தம்மாள் தம்பதியின் மகள் அம்மு என்ற சிவஜோதி (வயது 19). சிவகுமார் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சமையலராகவும் கோவிந்தம்மாள் பேராவூரணி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்கள். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள சிவஜோதி வீட்டிலேயே இருந்துள்ளார். 

இவர்கள் ஏற்கனவே பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரே செக்கடித்தோப்பு என்ற பகுதியில் குடியிருந்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த காளி என்ற காளீஸ்வரன்(23), பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்சில் ஓட்டுநராகவும், லாரி ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது காளீஸ்வரனுக்கும் சிவஜோதிக்கும் காதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதித்துள்ளனர். இதனால் சிவஜோதியை பார்க்க அவரது பெற்றோர், சகோதரர்கள் இருக்கும் போதே காளீஸ்வரன் அடிக்கடி சிவஜோதி வீட்டிற்கு சகஜமாக சென்றுள்ளார்.

இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு காளீஸ்வரன் பேராவூரணியை விட்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். தூரத்தில் இருந்தாலும் காளீஸ்வரனும் சிவஜோதியும் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆன தகவல் தெரிந்த பிறகு சிவஜோதி, காளீஸ்வரனுடன் பேசாமல் இருந்துள்ளார். செல்போன் மூலம் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளனர். 

தனக்கு திருமணமானாலும் காதலியை மறக்க முடியாத நிலையில் இருந்த காளீஸ்வரன், செவ்வாய்க்கிழமை மாலை பொன்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் பகுதியில் உள்ள சிவஜோதியை பார்ப்பதற்காக குடிபோதையில் வந்த காளீஸ்வரன், சிவஜோதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு வற்புறுத்தியுள்ளார். திருமணம் ஆன உன்னுடன் வரமாட்டேன்; நீ போய் உன் மனைவியுடன் போய் வாழ்ந்துக்க என்று சிவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார். வாய்த் தகராறு முற்றவே சிவஜோதியின் பெற்றோர், பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்த காவலர்கள் காளீஸ்வரனை கண்டித்து அனுப்பியுள்ளனர். காதலியை விட்டுப் போக நினைக்காத காளீஸ்வரன், புதன்கிழமை அதிகாலை மீண்டும் வந்து தூங்கிக் கொண்டிருந்த சிவஜோதியிடம் தன்னுடன் வந்து விடுமாறு மீண்டும் அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிவஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டுக் கதவின் பின்புறம் இருந்த கல்லை எடுத்து சிவஜோதி தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவஜோதி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சிவஜோதியின் சகோதரர்கள் அவனைப் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறையினர், சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய காளீஸ்வரனை தேடி வருகின்றனர். 

மேலும் தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு, அது சிறிது தூரம் ஓடி நின்றது. காதலித்த இளம்பெண், திருமணமான தன்னுடன் வராமல் தவிர்க்கவே ஆத்திரமடைந்த காதலன் கல்லை தலையில் தூக்கிப் போட்டுக் கொன்ற சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

“காளீஸ்வரன் முதல் நாள் சண்டை போட்ட போதே போலீசாருக்கு தகவல் சொன்னோம். அவங்க வந்து அவனை அழைச்சுட்டு போய் இருந்தால் எங்க புள்ளை உயிர் போயிருக்காது. வந்த போலீசார் அறிவுரை கூறி அனுப்பியதால் மீண்டும் போதையில் வந்து எங்க புள்ளைய கொன்னுட்டானே! எங்களுக்குன்னு கேட்க ஆள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா...” என்று உறவினர்கள் கதறிய கதறல் மருத்துவமனை வட்டாரத்தில் அனைவரையும் கண் கலங்க வைத்தது.

Next Story

தங்கையின் காதலை எதிர்த்த அண்ணன் வெட்டிக் கொலை; காதலன் வெறிச் செயல்!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
boyfriend who incident his girlfriend  brother who was against love

புதுக்கோட்டை அடப்பன்வயல் 6-ம் வீதி சிங்காரம் மகன் ஒச்சி கார்த்தி (எ) கார்த்தி (25). இவரது தங்கையும், மேல 6-ம் வீதி அரியமுத்து மகன் 29 வயது சீனிவாசனும் காதலித்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த ஒச்சி கார்த்தி தன் தங்கை மீதான காதலை விடுமாறு சீனிவாசனிடம் கூறியுள்ளார். சீனிவாசனோ காதலை துண்டித்துக்கொள்ள மறுத்துள்ளார். இதனால சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கார்த்தி தன் தங்கையுடனான காதலை விட வலியுறுத்தி வந்த நிலையில் தான் தன் காதலை விட மனமில்லாத சீனிவாசன் தன் காதலுக்கு தடையாக உள்ள தன் காதலியின் அண்ணன் கார்த்தியை தீர்த்துக்கட்ட தன் நண்பர்களுடன் சேர்ந்து முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் (7.2.2024) கார்த்தி விஸ்வநததாஸ் நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டைப் பார்க்க வந்த போது பின் தொடர்ந்து வந்த சீனிவாசன், அவரது நண்பர் அடப்பன்வயல் 3-ம் வீதி நாகராஜன் மகன் நெருப்பு தினேஷ் என்கிற தினேஷ் (25), மற்றும் ஒருவர் என 3 பேரும் சேர்ந்து கார்த்தியை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

பலத்த காயமடைந்து கீழே சாய்ந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருக்கோகர்ணம் போலிசார் கார்த்தி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர். இதில் ஒச்சி கார்த்தி, சீனிவாசன் ஆகியோர் நண்பர்களாக சேர்ந்து பல வழக்குகளில் சிக்கி வெளிவந்தவர்கள் என்று கூறப்படுகிறது. காதலுக்கு தடையாக இருந்த நண்பனான காதலியின் அண்ணனையே வெட்டிச் சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.