Skip to main content

"நீதிபதியாக வந்துவிட்டால் நீதியை மட்டுமே தர வேண்டும்" - சி.பி. ராதாகிருஷ்ணன் 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

jharghand  governor radhakrishnan talks about governor posting 

 

ஜார்கண்ட் மாநில ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''மீண்டும் ஒரு ஆளுநர் பதவியை குடியரசுத் தலைவரும் பிரதமர் மோடியும் அளித்திருப்பது அவர்கள் தமிழ் இனத்தின் மீது; தமிழ் கலாச்சாரத்தின் மீது; தமிழ் பண்பாட்டின் மீது; தமிழ் மொழியின் மீது; தமிழர்கள் மீது அவர்கள் எத்தகைய மகத்தான பாசமும் மரியாதையும் பெருமையும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

 

ஒரே மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆளுநராக அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆளுநராக இருப்பது என்பது புதிய வரலாறு. எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற பதவியின் மூலமாக அதுவும் குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஆளுநர் பதவி தரப்பட்டிருப்பது அங்கே இருக்கிற பழங்குடி இன மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கிற மக்கள் வாழ்கின்ற மாநிலத்தில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஜார்கண்டிற்கும் தமிழ்நாட்டிற்கும்  புதிய பாலத்தை உருவாக்குவோம். இதன் மூலம் இரண்டு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற திட்டங்கள் உருவாக்கப்படும். இந்த வாய்ப்பை அந்த ஏழை எளிய மக்களின், பழங்குடி மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களினுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் செயல்பட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன்.

 

ஆளுநர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். வக்கீலாக இருக்கும் போது கட்சிக்காரர்களுக்கு வாதிடுவது நியாயம். நீதிபதியாக வந்து விட்டால் நீதியை மட்டுமே தரவேண்டும். அரசியலில் இருந்து பரிணாம வளர்ச்சியில் ஆளுநர் பதவிக்கு வந்துவிட்டால், அரசியலில் நாட்டம் கொள்ளாமல் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது தான் சிறந்தது. ஆளுநர் பதவி எனக்கு கிடைத்த பெருமையாக நினைக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். மோடிக்கும் குடியரசுத் தலைவருக்கும் தமிழ் இனத்தின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.