Skip to main content

ஜெயமோகனின் புகாரால் கைது செய்யப்பட்ட மளிகைக்கடைக்காரர் ஜாமீனில் விடுவிப்பு! 

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

 

கடந்த 14 - ந்தேதி இரவு புளிச்சமாவை வீசி கடைக்காரப் பெண்ணிடம்  அத்துமீறி நடந்துகொண்டதால் அப்பெண்ணின் கணவர் செல்வத்துக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமிடையே கைக்கலப்பு ஏற்பட்டது. அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் ஏ.எஸ்.பி. ஜவஹர் உத்தரவின்படி அதிரடியாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் மளிகைக்கடைக்காரர் செல்வம். ஆனால், ஜெயமோகனின் அடாவடியால் பாதிக்கப்பட்ட கடைக்காரப் பெண்மணி கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இந்த வழக்கை விசாரித்த நாகர்கோயில் நீதிமன்றம் செல்வத்திற்கு தற்போது  ஜாமீன் வழங்கி விடுவித்திருக்கிறது.

 

v

 

ஜெயமோகன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தை நாட இருக்கிறார்கள் கடைக்காரர் குடும்பத்தாரும் வியாபாரிகள் சங்கத்தினரும். 

சார்ந்த செய்திகள்

Next Story

2.0வில் அக்சய்குமார் பெயர் பக்சிராஜன்... - காரணத்தை விளக்கிய எழுத்தாளர் ஜெயமோகன்!  

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று வெளியாகி அதன் பிரம்மாண்டத்தாலும், ரஜினிகாந்த்தின் ஸ்டைலான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

pakshi rajan



படத்தில் பறவை வடிவில் பலரைக் கொல்லும் பறவைக் காதலராக 'பக்ஷிராஜன்' என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் அக்ஷய்குமார். 'பக்ஷி' என்றால் பறவை என்பதும் அந்தப் பெயருக்கு 'பறவை அரசன்' என்ற அர்த்தமும் எளிய வகையில் ரசிகர்களுக்குப் புரியும். அதையும் தாண்டி அந்தப் பெயரின் புராண பின்புலத்தையும் கூடுதல் தகவல்களோடு விளக்கியுள்ளார் 2.0 கதை உருவாக்கத்திலும் வசனங்களிலும் பங்காற்றியுள்ள பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். தனது வலைத்தளத்தில் ஒரு வாசகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஜெயமோகன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

 

jatayu



"பக்ஷிராஜபுரம் என்பது எங்களூரில் இருக்கும் பறக்கையின் சம்ஸ்கிருதப்பெயர். தமிழில் பறவைக்கரசனூர். சுருக்கம் பறக்கை. அங்கே ஜடாயு பெருமாளுக்கு நிகராக வழிபடப்படுகிறார்".

மேலும் அக்ஷய் குமாரின் பாத்திரம் குறித்து விளக்கியுள்ள அவர்,  

"அது பறவையியல் நிபுணர் சலிம் அலியின் சாயல் கொண்ட கதாபாத்திரம். சலிம் அலி இன்றிருந்தால், மனிதர்களின் இந்த தொழில்நுட்ப, நுகர்வு வெறியைப் பார்த்தால் சங்கைக் கடித்திருக்கமாட்டாரா என்ற எண்ணத்திலிருந்து உருவானது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

jeyamohan



கூடுதல் தகவலாக அந்தக் கதாபாத்திரம் முதலில் நடிகர் கமல்ஹாசனுக்காக உருவாக்கப்பட்டது எனவும் அதை மனதில் வைத்து சில விஷயங்கள் அதில் சேர்க்கப்பட்டதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

எழுத்தாளர் ஜெயமோகனின் வலைதளம்


 

Next Story

சர்கார் படத்தின் கதை கரு திருடப்பட்டதா? எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

Published on 28/10/2018 | Edited on 28/10/2018
je

 

விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் சர்கார் படத்தின் கதை தனது ‘செங்கோல்’ என்ற கதையில் இருந்து திருடப்பட்டது என்று திரைத்துறையில் துணை இயக்குநராக இருக்கும் வருண் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.  திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே செங்கோல் கதையை பதிவு செய்து வைத்துள்ளதாக வருண் தனது புகாரில் கூறியுள்ளார்.   செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்றே என்று எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜும் தெரிவித்துள்ளார்.  ஆனால், சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்,  இக்கதை திருடப்பட்டது அல்ல.  இது என் கதைதான் என்கிறார்.

 

நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறது? யார் பக்கம் தீர்ப்பு வரப்போகிறது என்று இரு தரப்பினரும் பதைபதைப்புடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்நிலையில் சர்கார் படத்திற்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன் சேலத்தில் அளித்துள்ள பேட்டியில்,   ‘’சர்க்கார் படத்தின் கதையின் கரு திருடப்பட்டது அல்ல.   ஒரு நிகழ்வை பற்றி யார் வேண்டுமானாலும் சிந்திக்கலாம்’’என்று சர்ச்சை குறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார்.