Skip to main content

அமைச்சர்களுக்கு எதிராக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் போர்க்கொடி ! கோட்டையில் பரபரப்பு !

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
cvs


ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொல்லி, சசிகலா வகையறாக்களுக்கு எதிராகவும், சுகாதார துறை செயலாளர்  டாக்டர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் குற்றம் சுமத்தினார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். இவரின் குற்றச்சாட்டுகளை அமைச்சர் ஜெயக்குமாரும் ஆதரித்தார். இதனால், இந்த விவகாரம் பரபரப்பானது. அமைச்சர்களின் இந்த குற்றச்சாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

 

t


 இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.சோமநாதன் தலைமையில் இயங்கும்  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நல சங்கத்தின் நிர்வாகக் குழு கடந்த 2- ந்தேதி கூடி ஆலோசித்தது. அந்த ஆலோசனையில், ராதாகிருஷ்ணனுக்கு எதிராக குற்றம்சாட்டிய அமைச்சர் சண்முகத்தையும், அவருக்கு ஆதரவளித்த அமைச்சர் ஜெயக்குமாரையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அமைச்சர்களின் இத்தகைய போக்குகளை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தாமல் போனால் ஒவ்வொரு அதிகாரிகளுக்கு எதிராகவும் பொது வெளியில் குற்றம்சாட்டுவார்கள். அதனால் முளையிலேயே இதனை கிள்ளியெறியவேண்டும் என்றெல்லாம் விவாதித்துள்ளனர். மேலும், அமைச்சர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட முடிவுசெய்தனர். 

 

r

 

இது குறித்து தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடமும் தங்களின் ஆட்சேபத்தை தெரிவிக்கவும் முடிவு செய்தனர். அமைச்சர்களின் கருத்துக்களுக்கு எதிரான தங்களின் ஆட்சேபத்தையும் கோபத்தையும் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள். இந்த தீர்மானம் தற்போது முதல்வருக்கும் தலைமைச்செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது !


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
the former minister CV shanmugam who slammed the BJP

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார். 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் எஞ்ஜினியர்கள் வேலைக்கு எடுத்தனர். இவர்களில் ஒரு தமிழருக்கு கூட இல்லை. அத்தனை பேரும் வட இந்தியர்கள். ஜிப்மர் மருத்துவமனையில் வேலை கொடுங்கள், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை கொடுங்கள். அரசு நிறுவனங்கள் எல்லாம் விற்று விட்டனர். இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே வளர்ந்துள்ளனர். ஒருவர் அம்பானி மற்றொருவர் அதானி. பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் திருவள்ளுவர், தமிழ் என்று பேசுவார். ஆனால் மறுபுறம் இந்தி திணிப்பு.

மத்திய பா.ஜ.க. அரசு மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடப் பார்க்கிறது. அமைதியாக உள்ள தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் சமம். வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை” என்று ஆவேசமாக பேசினார். 

Next Story

பா.ம.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் பேச்சுவார்த்தை?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
ADMK with pmk Renegotiate
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், இதுகுறித்து முடிவு செய்ய பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் இன்று (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.