Skip to main content

தகுந்த ஆதாரத்தை காட்டினால் நகைக்கடன் தள்ளுபடி - ஐ.பெரியசாமி உறுதி

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

jkl

 

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு பயிர்கடன் மற்றும் 5 பவுனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்தார். அதன்படி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான நகைகள் வழங்கும் விழா ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள டிடி.595 காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர ஐ.பெரியசாமி கலந்துகொண்டார். மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமை தாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதாவது, "முதல்வர் அவர்கள் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியான விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு குறைவாக வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வோம் என அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. கரோனா நிவாரண நிதி வழங்கிய பின்பு அதன் தொடர்ச்சியாக கூட்டுறவுத்துறையின் மூலம் பொது நகைக்கடன் (2021) தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு அவர்களுக்குரிய நகைகளையும், சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பயனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் பொது நகைக்கடன் 50 ஆயிரத்து 120 பயனாளிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இன்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களும், நகைகளும் வழங்கப்பட உள்ளது. சட்டமன்றத்தில் பலமுறை யார்யாருக்கு நகைக்கடன் வழங்கப்படும் என்பதை சுட்டி காட்டியுள்ளேன்.

 

அதன்படி தமிழகம் முழுவதும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 கடன்தாரர்களில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பயனாளிகள் தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டு நகைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. நகைக்கடன் தள்ளுபடியில் தகுதி உள்ள நபர்கள் விடுபட்டு போயிருந்தால் எப்போது வேண்டுமானாலும் தகுந்த ஆதாரங்களை கொடுத்து நகைக்கடன் தள்ளுபடியை பெறலாம்.

 

இந்த காமாட்சிபுரம் கூட்டுறவு சங்கம் அருகில் தேர்தல் நடக்கும் பேரூராட்சியிலிருந்து 5 கி.மீ தூரத்திற்கு அதிகமாக உள்ளது. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி ஏற்கனவே அறிவித்த நலத்திட்டம் என்பதால் இன்று இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் மட்டும் 103 பயனாளிகள் பயன் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு ரூ.50 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்