Advertisment

சென்னை வங்கியில் நகைகள் கொள்ளை!

Jewelery robbery in Chennai bank!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் பிரிவில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Advertisment

ஃபெடரல் வங்கியில் தங்க நகைக்கடன் பிரிவில் லாக்கரில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. வங்கி மேலாளர் அளித்த தகவலின் பேரில் வடக்கு மண்டல காவல்துறைக் கூடுதல் ஆணையர் அன்பு தலைமையிலான காவலர்கள், வங்கிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

Advertisment

லாக்கரில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முருகன் என்ற வங்கி ஊழியர், தனக்கு குளிர்பானங்கள் தந்ததாகவும், அதைக் குடித்த பின் மயங்கிய நிலையில் கொள்ளை நடந்துள்ளதாகவும் காவலாளி தெரிவித்துள்ளார்.

நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக, நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Chennai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe