Skip to main content

‘வாழ்வோம் வாழவைப்போம்’ மக்களின் வாழ்கையைக் கெடுத்த நகைக்கடை நிறுவனம்!

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

 jewelery company that scammed people in Nellai

 

“உங்க பணத்துக்கு நாங்க கியாரண்டி. நம்பி வாங்க சந்தோஷமா போங்க. வாழ்வோம் வாழ வைப்போம்”என்ற ஆசை வார்த்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நகைக்கடை மோசடி குறித்த தகவல், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனது யூடியூப் சேனலில் ஸ்போக்கன் ஹிந்தி கிளாஸ் எடுத்து வருபவர். அதுமட்டுமின்றி, திருநெல்வேலியில் உள்ள சேரன்மாதேவி தாலுகாவில், நெக்ஸ்ட் ஜென் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், சுந்தர் அந்த நிறுவனத்தில் கொரோனா கோல்ட் பிஸ்னஸ் என்ற திட்டம் ஒன்றை தொடங்கி, அதில் 10 கிராம் தங்கம் வாங்கினால் 24 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்துள்ளார்.

 

மேலும், அவரது யூடியூப் பக்கத்தில், "எங்க நெக்ஸ்ட் ஜென் ஜுவல்லர்ஸ்ல நீங்க நகை வாங்குங்க. நா உங்கள பணக்காரனா ஆக்குறேன். உங்க பணத்துக்கு நாங்க கியாரண்டி. நம்பி வாங்க சந்தோஷமா போங்க. வாழ்வோம் வாழ வைப்போம்" என ஆசை வார்த்தைகளுடன் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி,  “உங்களால 10 கிராம் தங்கம் வாங்க முடியலையா? அப்ப வெறும் 8000 ரூபாய் பணத்த கட்டி இந்த திட்டத்தில் சேர்ந்துக்கோங்க. ஒருவேளை உங்களுக்கு இந்த பிசினஸ் பிடிக்கலைன்னா, மூணு மாசத்துக்கு அப்புறம், உங்க பணத்த கொடுத்துடுவோம். ஆனால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என நம்பிக்கை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளனர்.

 

இதையடுத்து, இந்த திட்டத்தை உண்மை என நம்பிய அப்பாவி பொதுமக்கள், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் இணைந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக, அவர்களிடம் ஸ்டேஜ் என்ற முறையில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். இந்த பிசினஸை சுந்தரின் மனைவி ஜெபகனி மற்றும் அவரது மகன் விஜய் என மூவரும் இணைந்து நடத்தி வந்துள்ளனர்.

 

அதே போல், ஆரம்பத்தில் அவர்கள் சொன்னதை போல், முதலில் சேர்ந்த நபருக்கு 24 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி தரப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு நெக்ஸ்ட் ஜென் நிறுவனம் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.  இதில் பல்வேறு மாற்றங்களை செய்ததால், அந்த பிசினஸும் முடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பணமும் போய் சேரவில்லை. இதனையடுத்து, வாடிக்கையாளர்கள் இந்த பிசினஸில் இருந்து வெளியேற கேட்டபோது, “முன்னர் கூறியது போல முழுத்தொகையும் கிடைக்காது” என சுந்தர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், பலமுறை செல்போன் மூலமாகவும் நேரடியாகவும் சென்று அணுகிய போது சரியான விளக்கம் அளிக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நெக்ஸ்ட் ஜென் நிறுவனத்தில் முதலீடு செய்த கோவையை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத் தரும்படி, கோவை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தற்போது, இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.