Skip to main content

ஜீப் மோதி விபத்து... போலீஸ் டிஎஸ்பியின் மகன் கைது!

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

Jeep collision .... DSP son arrested!

 

சென்னை கீழ்ப்பாக்கம் பெரியார் சாலையில் ஜீப் மோதிய விபத்தில் பெண் வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவத்தில் டிஎஸ்பியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குற்றத்தடுப்புப் பிரிவு டிஎஸ்பி குமரனின் ஜீப்பை அவரது மகன் லோகேஷ் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட விபத்தில் சேத்துப்பட்டுவைச் சேர்ந்த தனியார் வங்கியில் பணிபுரியும் அமிர்தா என்ற பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து டிஎஸ்பியின் மகன் லோகேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்