Skip to main content

ஹைட்ரோ கார்பனை எதிர்க்காத எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடுவோம்; பேரா.ஜெயராமன் ஆவேசம்

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுப்பதற்கு குரல் கொடுக்காத எம்,பி. எம்,எல்,ஏ,க்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருக்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

 

z

 

காவிரிப் படுகையை சமீபகாலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வெடித்த வண்ணம் இருக்கிறது. விவசாயிகள் வயல்களிலும், குளங்களிலும், ஆறுகளிலும், கழிவுநீரிலும் இறங்கி பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதற்கு நிகராக பெண்களும் கோயில்களில் வழிபாடு நடத்துவதும், மக்கள் கூடும் இடங்களில் ஒப்பாரிவைத்து விழிப்புனர்வு ஏற்படுத்துவதுமாகவும்,அரசியல் கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்ட அதற்கான வேலைகளை செய்துவருகின்றனர்.

 

இந்த நிலையில் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனும் ஒருபுறம் மக்களை திறட்டி போராடிவருகிறார், அவர் "காவிரிப்படுகை மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. மூன்று சுற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஒட்டுமொத்த பகுதியும் அழியப்போகிறது. முதல் சுற்றில் 5 ஆயிரத்து 94 சதுர கிலோமீட்டரில் 341 எண்ணெய் கிணறுகள் அமைகின்றன.

 

67 கிணறுகள் ஒ,என்,ஜி,சியியும், 274  கிணறுகள் வேதாந்த நிறுவனத்துக்கும் சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் காவிரிப்படுகையை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட உள்ளது. இந்ததிட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று எல்லாக் கட்சிகளும் கூறியுள்ளனர். ஆனால் ஹைட்ரோகார்பன் சுற்றுச்சூழல் அனுமதி அளித்தவுடன் புதுச்சேரி முதல்வர் அந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டார். ஆனால் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி மௌனமாக இருப்பது அச்சத்தை  ஏற்படுத்தி இருக்கிறது.

 

 ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் 28ஆம் தேதி முதல் பரப்புரை பயணம் நடத்தப்பட இருக்கிறோம். மேலும் விவசாயிகள் நிலம் தர மறுக்கும் இயக்கத்தையும் தொடங்க உள்ளோம். பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காத எம்பி எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத் தமிழகம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு அல்ல தமிழக மக்களுக்கு ஆனது என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்டிஓ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக அரசைக் கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

 

struggle front of BSNL office condemning Karnataka Govt

 

கர்நாடகா அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் அமைப்புகளைக் கண்டித்தும், தமிழக அரசு, பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் தமிழக விவசாயிகளை பற்றிக் கவலைப்படாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டம் முழுவதும் காவேரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.    

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலக நுழைவாயில் முன்பு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Next Story

தவிச்ச பயிறுக்கு உசுரு தண்ணீர் ஊற்றும் டெல்டா விவசாயிகள் 

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Delta farmers who pour water  to their distressed crops

 

‘தவிச்ச வாய்க்கு ஒருவாய் தண்ணீர் கிடைக்குமா’ என்கிற ஏக்கத்தில் டெல்டா மாவட்டத்தில் கருகும் நிலையில் உள்ள குருவைப் பயிர்கள் காத்துக்கிடக்கின்றன. பயிர்களைக் காப்பாற்ற குளம், குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரைக்கொண்டு தெளிக்கும் அவலமான சூழல் நிலவி வருகிறது.

 

குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரிப்பாசன பகுதிகளுக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடைமடைப் பகுதிகளான திருவாரூர், நாகை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களுக்கு ஒருமுறையும், பல கிராமங்களுக்கு இன்றுவரை தண்ணீர் வராமல் இருப்பதுமாக உள்ளது. மேட்டூர் தண்ணீரை நம்பி குருவை சாகுபடியில் இறங்கிய விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர். 

 

சில விவசாயிகள் அருகில் உள்ள குளம், குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை எடுத்து வந்து இளம் பயிரை காப்பாற்றி வருகின்றனர். இதனைப் பார்க்கும்போது முப்போகம் விளைந்த மண்ணுக்கு வந்த சோதனையப் பாரு என்று கலங்கும் நிலையே இருக்கிறது. 

 

Delta farmers who pour water  to their distressed crops

 

நேரடி விதைப்பில் ஈடுபட்டு ஒரு மாத காலமான நிலையில், பயிர்கள் வளர்வதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வளர்ச்சி அடையாமல் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பயிரைக் காப்பாற்ற உடனடியாக முறையின்றி தண்ணீர் வழங்க வேண்டுமெனவும், தமிழக அரசுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பயிர்களுக்கு குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து தெளித்துவரும் விவசாயிகளோ, “வழக்கத்தை விட இந்த வருஷம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கு. பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. இதை காப்பாற்ற தற்காலிக முயற்சியாக நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை குடங்களில் எடுத்துவந்து தெளித்து வருகிறோம். கிட்டத்தட்ட தவிச்சு நிற்கும் பயிருக்கு உசுரு தண்ணீர் ஊற்றி வருகிறோம் என்றுதான் சொல்லணும். இதுபோல எத்தனை நாளுக்கு ஊத்த முடியும்னு தெரியல, எனவே பாதிக்கப்பட்ட நெற்பயிரை காப்பாற்ற அரசு முயற்சிக்கணும். அதோடு அவ்வப்போது முறைவைத்து திறக்கப்படும் தண்ணீரும் கூட ஆங்காங்கே நீர்நிலைகளில் நடந்துவரும் கட்டுமான பணிகளால் தடுத்து நிறுத்திவிடுகின்றனர். இதுவரை மடைக்கு தண்ணீர் வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்கின்றனர்.