நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததால் சென்னை தலைமை செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உட்பட பல அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், சாதனை விளக்க படங்கள் நீக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
அதேபோல் அரசியல் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றினர்.