Skip to main content

ஜெ., பரிசுப்பொருள் வழக்கு தள்ளுபடி; செங்கோட்டையன் விடுவிப்பு

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட பரிசுப்பொருள் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.  மேலும்,   ஜெயலலிதா பரிசுப்பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவிடுத்தது உச்சநீதிமன்றம்.

 

s

 

1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பிறந்தநாள் பரிசாக அவருக்கு அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன.   முதல்வராக இருப்பவர் தமக்கு வரும் பரிசுப்பொருட்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனபது சட்டம். முதல்வர்  ஜெயலலிதா தனக்கு பரிசாக வந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டாலர்களை தமது வங்கிக்கணக்கில்  சேர்த்துக்கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது.    

 

ஜெயலலிதாவுக்கு அமெரிக்க டாலரை பரிசாக வழங்கிய செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.   ஜெயலலிதாவும், அழகு திருநாவுக்கரசும் காலமானதால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது.   

 


விசாரணையை சிபிஐ காலதாமதமாக கையாண்டதால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.  ஆகையினால், 23 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை.  ஆகவே, இவ்வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவிக்கிறது நீதிமன்றம்.   வழக்கில் உள்ள மூவரும் விடுவிக்கப்பட்டதால்  இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“டாக்டர் முடியலைன்னா விட்ருங்க...” - வைரலாகும் ஜெ-வின் ஆடியோ 

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

jayalalithaa old video goes viral

 

4 ஆண்டுகளுக்கு முன்பு ‘நக்கீரன்’ தளம் வெளியிட்ட ஜெயலலிதா திணறிப் பேசும் ஆடியோ  தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். 2016ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே போகிறது.

 

இந்நிலையில், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளில் இருந்து நக்கீரன் தளம் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வந்தது. அதில், ஜெயலலிதாவை அடக்கம் செய்யும்போது அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டிருந்தது என்று நக்கீரன் தளம் அந்த செய்தியை பகிரங்கமாக அம்பலப்படுத்தியது. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை ஆதாரத்துடன் வெளியிட்டதை அடுத்து ஜெயலலிதா சிகிச்சை குறித்த அதிர்ச்சி ஆடியோ ஒன்றை வெளியிட்டது.  

 

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பலத்த மூச்சுத்திணறலுடன் மருத்துவருடன் 1 நிமிடத்திற்கு மேலாக பேசும் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அப்போது பேசிய  ஜெயலலிதா  “ OH SAD...எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க? ” என்று மருத்துவரிடம் கேட்க, அதற்கு அந்த மருத்துவர்  “ VLC  ரெக்கார்ட்ல மேடம்... அப்ளிகேஷன் டவுன்லோடு பண்றேன்” என பதிலளிக்கிறார். இதனையடுத்து  “இப்போ நான் சொல்றது கேக்குதா? அப்போ கூப்பிட்டேன்... ஆனா எடுக்க முடியலனு சொன்னீங்க” என கூறிய ஜெயலலிதா  “அய்யோ... அம்மா... நெஞ்சுல விசில் சத்தம் கேட்குது” என்று பதட்டத்துடன் பேசும் ஆடியோ கேட்போர் நெஞ்சை பதற வைத்தது.                                                                                                                                                                                           

மேலும், அவர் பேசும்போது  “எல்லாம் ஒண்னு கிடக்க ஒண்ணு பண்றீங்க... நீங்களும் சரியில்ல டாக்டர், எடுக்க  முடியலைன்னா  விடுங்க’’ என அந்த ஆடியோவில் ஜெயலலிதா பேசுகிறார். இந்த ஆடியோ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி நக்கீரன் தளத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் லீக் ஆன இந்த ஆடியோவால் தமிழகத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த ஆடியோ  அதிமுகவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Next Story

ஜெ. மரணத்தில் சிக்கும் சசிகலா; பரபரப்பை கிளம்பிய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

Sasikala involved jayalalitha Arumugasamy Commission report

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்துள்ள ஆறுமுகசாமி ஆணையத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோதே கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சந்தேக ரேகைகள் விழுந்தது.

 

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், ஜவ்வாக இழுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஆட்சி நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.

 

இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை எனக் கூறும் இந்த அறிக்கை, ஜெயலலிதா மயக்கமடைந்த பின்னர் அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என பகீர் கிளப்பியுள்ளது.

 

மேலும், 2012-க்குப் பிறகு ஜெயலலிதா சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகும் கூட, இருவருக்கும் இடையே சுமூகமான உறவு நிலவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது எனவும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஆணையம்., ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருப்பதாக அதிர்ச்சி கொடுத்துள்ளது.

 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தொடங்கப்பட்டாலும் திமுக ஆட்சிக் காலத்திலும் நீடித்தது. பல முறை இந்த ஆணையம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மிகவும் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ள இந்த அதிர்ச்சிகர அறிக்கை தற்போது வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.