Skip to main content

அனுமதியின்றி ஜெயலலிதா, எம்,ஜி,ஆர் சிலை திறப்பு... அதிரடியை காட்டுமா காவல்துறை..?

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Jayalalithaa, MGR statue unveiled without permission; Will the police take action

 

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினரும், அமமுகவினரும் போட்டிப் போட்டுக்கொண்டுக் கொண்டாடினர்.

 

நாகை மாவட்டம், அதிமுக கட்சி அலுவலக வாசலில் காவல்துறையின் அனுமதியோ, மற்ற அனுமதியோ இல்லாமல், அதிகாலை 4 மணிக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை அதிமுகவினர் திறந்திருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. 

 

நாகை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தின் பக்கவாட்டு இடத்தில், திறந்த வெளியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை ஜெயலலிதா பிறந்தநாளில் திறக்க திட்டமிட்டு, சிலைக்கான பீடங்களைக் கட்டி அமைத்துவந்தனர். தலைவர்களின் சிலைகளைத் திறப்பதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்கிற விதி இருக்கிறது. ஆனாலும் அதிமுகவினர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளைத் திறக்க நாகை மாவட்டக் காவல்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறாமலேயே திறந்துள்ளனர். 

 

தேசிய நெடுஞ்சாலையில் சிலை திறப்பதால் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை உணர்ந்த அதிமுக நிர்வாகிகள், அவசர அவசரமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் தகவலைக் கூறி, அதிகாலை 4 மணிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படியே முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பவுன்ராஜ் உள்ளிட்டோர் தலைமையில், ஜெயலலிதா பிறந்த தினத்தன்று அதிகாலையில் இருட்டோடு இருட்டாக சிலைகளைத் திறந்தனர். அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். 

 

இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலை திறப்பது குறித்து எந்தவித அனுமதியும் கேட்டு மனு அளிக்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ‘பலமுறை பல இடங்களில் அனுமதியில்லாமல் திறக்கப்பட்ட சிலைகளை அதிரடியாக அப்புறப்படுத்திய போலீஸார், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? சிலையை அப்புறபடுத்துவார்களா, அல்லது அவசர அவசரமாக ஒரு பொய்யான மனுவைத் தயாரித்து, முன்னாடியே அனுமதி வாங்கிவிட்டார்களே என ஆளுங்கட்சிக்காரர்களைப் போலவே பிரச்சனையை மடைமாற்றிவிடுவார்களா? இனிமேல்தான் புரியும்’ என்கிறார்கள் அரசியல்வாதிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.