Skip to main content

அனுமதியின்றி ஜெயலலிதா, எம்,ஜி,ஆர் சிலை திறப்பு... அதிரடியை காட்டுமா காவல்துறை..?

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Jayalalithaa, MGR statue unveiled without permission; Will the police take action

 

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினரும், அமமுகவினரும் போட்டிப் போட்டுக்கொண்டுக் கொண்டாடினர்.

 

நாகை மாவட்டம், அதிமுக கட்சி அலுவலக வாசலில் காவல்துறையின் அனுமதியோ, மற்ற அனுமதியோ இல்லாமல், அதிகாலை 4 மணிக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை அதிமுகவினர் திறந்திருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. 

 

நாகை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தின் பக்கவாட்டு இடத்தில், திறந்த வெளியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை ஜெயலலிதா பிறந்தநாளில் திறக்க திட்டமிட்டு, சிலைக்கான பீடங்களைக் கட்டி அமைத்துவந்தனர். தலைவர்களின் சிலைகளைத் திறப்பதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்கிற விதி இருக்கிறது. ஆனாலும் அதிமுகவினர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளைத் திறக்க நாகை மாவட்டக் காவல்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறாமலேயே திறந்துள்ளனர். 

 

தேசிய நெடுஞ்சாலையில் சிலை திறப்பதால் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை உணர்ந்த அதிமுக நிர்வாகிகள், அவசர அவசரமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் தகவலைக் கூறி, அதிகாலை 4 மணிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படியே முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பவுன்ராஜ் உள்ளிட்டோர் தலைமையில், ஜெயலலிதா பிறந்த தினத்தன்று அதிகாலையில் இருட்டோடு இருட்டாக சிலைகளைத் திறந்தனர். அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். 

 

இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலை திறப்பது குறித்து எந்தவித அனுமதியும் கேட்டு மனு அளிக்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ‘பலமுறை பல இடங்களில் அனுமதியில்லாமல் திறக்கப்பட்ட சிலைகளை அதிரடியாக அப்புறப்படுத்திய போலீஸார், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? சிலையை அப்புறபடுத்துவார்களா, அல்லது அவசர அவசரமாக ஒரு பொய்யான மனுவைத் தயாரித்து, முன்னாடியே அனுமதி வாங்கிவிட்டார்களே என ஆளுங்கட்சிக்காரர்களைப் போலவே பிரச்சனையை மடைமாற்றிவிடுவார்களா? இனிமேல்தான் புரியும்’ என்கிறார்கள் அரசியல்வாதிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.