style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அப்போலோ மருத்துவர் மதன்குமார் வாக்குமூலம் அளித்தார். இவர் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், எக்மோ கருவி பொருத்தியபின்னும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை இதனால் டிசம்பர் 5ம் தேதி எக்மோ கருவி அகற்றப்பட்டது. ஜெயலலிதாவிற்கு இதயம், நுரையீரல் மாற்றும் திட்டம் இருந்ததா என ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அப்படி எதும் விவாதிக்கப்படவில்லை என மதன்குமார் பதிலளித்துள்ளார்.