முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். அதைத்தொடர்ந்து அவர் மரணம் குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதைத்தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த 2 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் 4 மாதங்களுக்கு விசாரணைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு வழங்கியுள்ளது.