மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர்பூங்குன்றன்புதிதாகத்தனி அமைப்புஒன்றைத்துவக்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமாகும் வரை அவரது உதவியாளராக இருந்தவர்பூங்குன்றன்சங்கரலிங்கம். ஜெயலலிதாமறைவுக்குப்பிறகு,அரசியலிலிருந்துஒதுங்கி, ஆன்மிக பாதையில் முழுநேரமாகப்பயணித்து வந்தார். தனது முகநூல் பக்கத்தில், அடிக்கடி அரசியல் குறித்த கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், தற்போது 'அம்மா ஆன்மிக பேரவை' என்ற புதியஅமைப்பைத்தொடங்கி உள்ளார்.
இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆன்மிகம் தொடர்பானது. இதில் அரசியல் இருக்காது என்றுபூங்குன்றன்கூறியுள்ளார்.