மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவ குழு ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அதற்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்ததில் எவ்வித குறைபாடு இல்லை என எய்ம்ஸ் மருத்துவ குழு தற்போது தெரிவித்துள்ளது.