Skip to main content

ரூ. 1000 கோடி ஜெயலலிதாவின் வைரத்தை விற்கும் முயற்சியா? விசாரணை நடத்த கோரிக்கை!

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

உலகின் மிகப்பெரும் வைரம் அறுத்து மெருகேற்றும் மையம் சூரத்தில் அமைந்துள்ளது. இவர்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வைரங்களை தயாரித்து விற்பனை செய்பவர்கள். கடந்த பிப்ரவரி 25, 26ஆம் தேதி என இரு தினங்களாக, புதிய வைரங்கள் மும்பை வைரத் தரகர்களால் வந்துகுவிவதால் ப்ளஸ் 11 வகை வைரங்களின் விலை 30 சதவிகிதம் அளவுக்கு சரிந்திருப்பதாக சூரத் வைர உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். 
 

இதுகுறித்து விசாரித்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த சில தரகர்களிடமிருந்து புதிய வைரங்கள் குவிவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடபாக விசாரித்தபோது, ''2016 நவம்பர் 8 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தமிழ்நாட்டில் இருந்து பணத்தைக் கொண்டு வந்து இரண்டு லட்சம் கேரட் அளவுக்கு வைரமாக மாற்றினார்கள். இது ஜெயலலிதா தரப்பினரால் மாற்றப்பட்டுள்ளது'' என்றும் கூறுகிறார்கள்.  

 

jayalalitha


 

மும்பையைச் சேர்ந்த ஒரு வைரத் தரகர், “அமெரிக்கா மற்றும் சீனாவில் நிலவும் பொருளாதாரச் சூழல்களால் வைரச் சந்தை மிகவும் கவனத்துடனே செயல்படுகிறது. மெருகேற்றப்பட்ட வைரத்தின் விலை வீ்ழ்ச்சி கண்டிருப்பதுடன், தமிழ்நாட்டிலிருந்து அதிகளவில் வரும் ப்ளஸ் 11 வைரத்தின் வரவால் விலை மேலும் சரிந்து கிட்டத்தட்ட 30 சதவிகிதமளவுக்கு விலைகுறைந்திருக்கிறது” என நிலவரத்தை விளக்கும் அவர், “இந்த ப்ளஸ் 11 வைரங்கள் 2016-ல் எக்ஸ் மதிப்பில் வாங்கப்பட்டன. ஆனால் தரகர்கள் அதை தற்போது குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதனால் வைர உற்பத்தி மையங்கள் இந்த விலைக்குறைப்பு யுத்தம் மற்றும் வரும் நாட்களில் வைரச் சந்தையின் மேல் இது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கவலை அடைந்துள்ளன.”
 

சூரத்தின்  மகிதாபுர வைர சந்தையைச் சேர்ந்த தரகர் மெஹ்சி பலாலா, “ப்ளஸ் 11 அளவிலான வைரங்கள் சந்தையில் பிரபலமான வைரமாகும். சூரத் இத்தகைய வைர உற்பத்திக்குப் பெயர்பெற்றது. இவை பெரும்பாலும் நகைகளில் பயன்படுத்தப்படும். ஆனால் இத்தனை மொத்தமாய் வைரம் விற்பனைக்கு வந்தால், நிச்சயம் விலையில் இது சரிவை ஏற்படுத்தும்.” என்கிறார்.

 

Diamond


 

சூரத் வைரக் கழகத்த்தின் தலைவரான பாபு குஜராத்தி, “செல்வந்தர்கள் பணமதிப்பிழப்பின்போது தங்கள் கறுப்புப் பணத்தை நீண்ட கால முதலீடாகக் கருதி வைரத்தில் முதலீடு செய்தனர். பணமதிப்பிழப்பின்போது பல அரசியல்வாதிகளுக்கு வைரத் தரகர்கள் உயர்தர வைரத்தை விற்ற நிகழ்வுகள் நிறைய நடந்திருக்கின்றன. அதில் இது மிக முக்கியமான உதாரணம். தமிழ்நாட்டின் மிகப்பெரும் அரசியல்வாதி 2 லட்சம் காரட்டுக்கும் அதிகமான வைரத்தை வாங்கி, தற்சமயம் அது மும்பை தரகர்களால் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதனால் உள்ளூர்ச் சந்தையில் விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது” என்கிறார்.
 

ப்ளஸ் 11 வகை வைரங்கள் ஒரு கேரட் ரூபாய் 50 ஆயிரம் வரை விற்கப்படுவதால் இரண்டு லட்சம் கேரட் வைரங்களின் மதிப்பு சுமார் ரூபாய் 1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 

ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததால் அவருக்காக வைரங்கள் வாங்கியது யார்? தற்போது அந்த வைரங்களை விற்பனை செய்வது யார்? பண மதிப்பிழப்பு நடவடிக்கை முன்கூட்டியே இவர்களுக்கு தெரியுமா? நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த வைரங்கள் விற்பனை செய்யப்படுவது தேர்தல் செலவுகளுக்காகவா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளர் வெற்றி; “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வந்துவிட்டது” - ராகுல் காந்தி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உள்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வந்துவிட்டது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக, மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது மற்றொரு படியாகும். மீண்டும் சொல்கிறேன், இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

மக்களவைத் தேர்தல்; போட்டியின்றி தேர்வான பா.ஜ.க வேட்பாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
BJP candidate selected without competition at Lok Sabha elections

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.