Skip to main content

ஜெ. சிலை திறப்பு விழா... மாணவிகள் பச்சை புடவை அணிந்து வர வலியுறுத்தல்! - கவலையில் பெற்றோர்!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

ddd

                                                                             மாதிரிப்படம்

 

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளைப் பெருமளவு கலந்துகொள்ள வைக்க அதிமுக நிர்வாகிகள் சிலர் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. 

 

காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை, 27.01.2021-ம் தேதி அன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்க உள்ளார். ரூ.58 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தைத் திறப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

 

இதேபோல் ஜெயலலிதாவின் உருவச்சிலை சென்னை உயர்கல்வி மன்ற வளாகமான, லேடி வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இதற்கான விழா வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாநிலக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரியில் படிக்கிற மாணவிகள் புடகை அணிந்தும், மாணவர்கள் வேட்டி அணிந்தும் பங்கேற்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். மாணவிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அதனை கண்காணிக்க பேராசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளார்களாம். 

 

விழா நடைபெறுவதற்கு இரண்டு நாள் முன்பு, அதாவது இன்று (ஜனவரி 25) நினைவிட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்திருக்கும் மகளிர் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளைக் கல்லூரிக்கு வரவழைத்து, அவர்களுக்குப் பச்சை வண்ண புடைவைகள் வழங்கவும், அதனை உடுத்திக்கொண்டு அவர்கள் ஜனவரி 27 அன்று திறப்பு விழாவிற்கு வருவதை உறுதிப்படுத்தவும் அதிமுகவினர் வேலை செய்து வருகின்றனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

 

இதுகுறித்து நக்கீரனிடம் தனது கவலையை வெளிப்படுத்திய மாணவி ஒருவரின் தாய், "கரோனா காலத்தில் பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்புவதே பயமாக இருக்கிறது. இப்படியான இந்த காலகட்டத்தில், அரசியல் நோக்கத்திற்காகப் பிள்ளைகளைப் பயன்படுத்தி கூட்டம் சேர்க்கிறார்கள். இது மோசமான விஷயமாகும். இப்படி மாணவிகளைத் திறப்பு விழாவிற்குப் பயன்படுத்துவது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் கூறப்படாத நிலையில், இதுபோன்ற திட்டம் இருந்தால் அதிமுகவினர், அதனைக் கைவிட வேண்டும்" எனத் தெரிவித்தார். 

 

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், கரோனா பரவல் தற்போதைக்கு சற்றே குறைந்திருப்பதாகக் கூறினாலும், இதுபோன்ற கட்சி சார்ந்த விழாவிற்காகக் கூட்டம் சேர்க்கும் பணிகளுக்காக மாணவர்களைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.