Skip to main content

'ஜெ' எதிர்த்ததை எடப்பாடி ஆதரிக்கிறார்! - கொதிக்கும் விவசாயிகள்! 

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

jayalalitha opposed edappadi supports farmers got angry on them

 

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் 19ந் தேதி  நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசும்போது, “நில அளவையர் பற்றாக்குறையால், கூட்டுப்பட்டாக்களை, தனிப்பட்டாக்களாகப் பிரித்து வழங்க முடியாத நிலை உள்ளது. அடுத்து, எலிகளால் விவசாயப் பயிர்கள் சேதமாகிறது. எலிக்கு வைக்கும் மருந்தினை, சில இடங்களில் மயில்கள் சாப்பிட்டு விடுகிறது இதனால், மயில்கள் இறக்க நேரிடுகிறது. அதனால், விவசாயிகள் மீது வழக்குப் பதிவாகிறது. எனவே, பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

சொட்டு நீர்ப்பாசனத்திற்கான மானியத்தை ஒன்றரை லட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும். மஞ்சள், மரவள்ளிக் கிழங்கிற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். காலிங்கராயன் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாகச் செயல்படும் சாய, சலவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிங்கராயன் கால்வாய் நீரில் மாசு குறித்து அறிய பொருத்தப்பட்ட தானியங்கி கருவியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். வேளாண் பொறியியல்துறை மூலம் மஞ்சள் அறுவடை இயந்திரத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மஞ்சள் தரம் அறியும் கருவியினை கிராமம்தோறும் கொண்டுசென்று பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நான்கு இடங்களில் நடக்கும் மஞ்சள் ஏல விற்பனையை ஒரே இடத்தில் நடத்த வேண்டும். தென்னமரங்களைத் தாக்கும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த வேளாண் பல்கலைக்கழக உதவியுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் ரூபாய் 750 கோடி மதிப்பீட்டில் கான்கீரிட் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெற்றிருந்த ரூபாய் 824 கோடி பயிர்க்கடனை ரத்து செய்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது, “கரோனா வைரஸ் பரவல் காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகு வேளாண் குறைதீர் கூட்டம் நடந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுமாயின், அடுத்த மாதம் இக்கூட்டம் நடைபெறாது. இருப்பினும், விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்கள் மற்றும் தொலைப்பேசி, வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படும். காலிங்கராயன் கால்வாயில் தானியங்கி முறையில் மாசு கண்டறியும் கருவியைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறும்போது "கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இதில், ரூபாய் 750 கோடி மதிப்பீட்டில் கான்கீரிட் தளம் அமைக்கும் திட்டத்தை இந்த அரசு கைவிட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு விரோதமானது, இந்த திட்டம். ஏற்கனவே 2011-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா இத்திட்டத்தை ரத்து செய்துள்ளார். ஆனால், அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி அரசு, கான்ட்ராக்ட் கமிஷனுக்காக இதைச் செயல்படுத்த தீவிரம் காட்டுகிறது. 'ஜெ' எதிர்த்தார், எடப்பாடி ஆதரிக்கிறார். அப்படி இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், கசிவுநீர் மூலம் பாசனம் பெறும் ஏராளமான நிலங்கள் பாதிக்கப்படும்” என்றனர் கொதிப்புடன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.