Advertisment

தமிழகத்தில் 4 ஆண்டுகளாக கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடத்தப்படாதது ஏன்?

jayalalitha 21

தமிழகத்தில் 4 ஆண்டுகளாக நடத்தப்படாத கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு இந்த ஆண்டு வரும் மார்ச் 5, 6, 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 5-ந்தேதி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டமும், மார்ச் 6-ந்தேதி அன்று மாவட்ட கலெக்டர்களுக்கான கூட்டமும், மார்ச் 7-ந்தேதி அன்று காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியிலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 11, 12, 13-ந்தேதிகளில் இந்த மாநாடு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் தலைமையில் நடத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு செப்டம்பரில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மாநாடு நடத்தப்படவில்லை.

Advertisment

2015-ம் ஆண்டில் அந்த வழக்கின் அப்பீல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் முதல்- அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். பின்னர் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அரசுத் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் இருந்தது. எனவே 2015-ம் ஆண்டிலும் டிசம்பர் மாதம் இந்த மாநாடு நடத்தப்படவில்லை.

edappadi palanisamy chief minister

2016-ம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, ஜெயலலிதா தலைமையிலான அ.தி. மு.க. மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால் அந்த ஆண்டில் டிசம்பர் 5-ந்தேதியன்று ஜெயலலிதா மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் 2016-ம் ஆண்டு டிசம்பரிலும் இந்த மாநாடு நடத்தப்படவில்லை.

அதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வின் புதிய ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனாலும் பல்வேறு காரணங்களுக்காக 2017-ம் ஆண்டு டிசம்பரில் இந்த மாநாட்டை அரசு நடத்தவில்லை. இந்த நிலையில் வரும் மார்ச் மாதம் இந்த மாநாட்டை நடத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Conference district police District Collector Tamilnadu govt edapadi palanisamy jayalalitha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe