Skip to main content

ஊத்தி மூடப்படுகிறதா ஜெ. மரணம் பற்றிய விசாரணை ஆணையம்?

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம் நிலவியதால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

 

இந்த ஆணையத்தில் வழக்கறிஞராக இருந்த நிரஞ்சன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் பார்த்தசாரதி என்பவர் நியமிக்கப்பட்டார்.  தற்போது அவரும் ஆணையத்தின் வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

jaya

 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட கடைசி நேர சிகிச்சைகள் எப்படி நடந்தது? யார் ஆலோசனைப்படி நடந்தது? என பல்வேறு கேள்விகளை முன்வைத்தவர் இவர்தான்.

 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது அவர், "ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை குறித்து ஓ பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தோம்.   ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த சந்தேகமும் இல்லை" என கூறியுள்ளார்.

 

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஜெயலலிதாவே கூறியதால்தான் அப்பல்லோ சார்பில் அறிக்கை கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையை நானும், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவும் இணைந்து தயாரித்து வழங்கினோம் எனக் கூறியுள்ளார்.

 

jaya

 

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய  பார்த்தசாரதி விடுவிக்கப்பட்டதும், மரணத்தில் சந்தேகம் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதும் ஆணையத்தின் விசாரணை தீவிரத்தை  முடக்குவதாக  தெரிகிறது என பரபரப்பு நிலவுகிறது.

 

இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்திலும்,    ஆணையத்தின் வட்டாரத்திலும் விசாரித்தபோது, எடப்பாடி அணியும் சசிகலா அணியும் இணைய போவதால் விசாரணை ஆணையத்தின் தீவிரம் குறைந்துள்ளதாக  தெரிவிக்கின்றனர்.

 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நிலவுவதாக கூறியவர் ஓ பன்னீர்செல்வம். அவர் வைத்த கோரிக்கையில் தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் கூறினாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெ மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் விசாரணை ஆணையத்தின் தெரிவித்திருப்பது ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான விரிசலை பெரிதாக்கும் என கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுகாதாரத்துறை ஆய்வில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை - தமிழக அரசு பதில்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

'Arumugasamy Commission Report on Health Sector Survey'-Tamil Government Response

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கை சுகாதாரத்துறை ஆய்வில் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அதிமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட ஆணையமானது திமுக ஆட்சியில் இறுதிக்கட்ட பணிகளை முடித்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சைகளை அளிக்க அப்போதைய அரசு இயந்திரம் முன்வராதது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றது.

 

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த அரசின் தலைமை வழக்கறிஞர் சார்பில், 'மறைந்த முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் வைக்கப்பட்டு தற்பொழுது மருத்துவ குறிப்புகளுக்காக சுகாதாரத் துறையின் அறிக்கை ஆய்வில் உள்ளது. ஆய்வறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது.

 

அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இனி அறிக்கையின் அடிப்படையில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்தும் அடுத்த வாரம் திங்கட்கிழமை பதில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 27 ஆம் தேதி ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

 

 

Next Story

ஆறுமுகசாமி ஆணையம்: மாஜி அமைச்சர் பெயருக்கு இடைக்கால தடை

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Arumugasamy Commission: Interim ban on former minister's name

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் தங்களது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்றிருந்தது.

 

இந்நிலையில் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளேன். மக்களிடையே எனக்கு நற்பெயர் உண்டு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சாட்சியாக என்னை விசாரிக்க அழைத்தது. தற்போது விசாரணை அறிக்கையில் என் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது ஏற்புடையது அல்ல. எனவே இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் எனது பெயர் சேர்க்கப்பட்டதற்கும் குற்றம் சாட்டப்பட்டதற்கும் தடை விதிக்க வேண்டும். அதை எவரும் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

 

இந்நிலையில் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்பட்டுள்ள பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்தும் இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு, 4 வாரங்களுக்கு இவ்வழக்கை ஒத்திவைத்தது.