Skip to main content

போயஸ் கார்டலினிலிருந்து எப்படி அழைத்து செல்லப்பட்டார் ‘ஜெ’ - ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

Jayalalitha case Arumugam Samy commission report

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து திடீரென இரவு அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஏறக்குறைய 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வந்தனர். குறிப்பாக அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், அவர் எந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பதிலும் அதிமுக தொண்டர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பினர். குறிப்பாக அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தி இன்னும் பரபரப்பை கிளப்பினார். 

 

Jayalalitha case Arumugam Samy commission report

 

இந்நிலையில், முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனை அமைத்து அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை துவங்கினார். ஆனால், அவர் தொடர்ந்து தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு வந்தார். அதற்கு அன்றைய அதிமுக அரசும் தொடர்ந்து அவருக்கு கால அவகாசம் அளித்து வந்தது. 

 

Jayalalitha case Arumugam Samy commission report

 

2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் விசாரிக்கப்பட்டு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய ஆணையத்தை கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையமும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தி பல்வேறு நபர்களிடமும் விசாரணையை நடத்தி, கடந்த சில வாரங்களுக்கு முன் தனது அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. 

 

Jayalalitha case Arumugam Samy commission report

 

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என முன்னதாக அரசு அறிவித்திருந்தது. அதேபோல், இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆணையம் சசிகலா, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளது. 

 

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து இரவு அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது என்ன நிலையில் இருந்தார் என்பதை விவரித்துள்ளது. அதன்படி, ‘மறைந்த முதல்வர் தனது வீட்டின் முதல் மாடியிலுள்ள தனது அறையின் குளியலறையிலிருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது அவருடன் அங்கிருந்த சசிகலா மற்றும் மருத்துவர் கே.எஸ். சிவகுமார் ஆகியோர் அவரை தாங்கிப் பிடித்தனர்.

 

Jayalalitha case Arumugam Samy commission report

 

மருத்துவர் சிவகுமார் விரைந்து ஆம்புலன்ஸ் சேவைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாகத் தகவலளித்து ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக முதல்வருக்கு மாஸ்க் மூலம் ஆக்ஸிஜன் வழங்கி முதலுதவி அளித்தனர். பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பின் ஐ.சி.யூ-க்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டார், அப்போது அவருக்கு சுயநினைவு திரும்பியிருந்தது’ என்று தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.