ஜெ.உதவியாளர் பூங்குன்றன் இரண்டாவது முறையாக ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இரண்டாவது முறையாக இன்றுஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே ஜனவரி மாதம் 9ஆம் தேதி ஆஜராகிய பூங்குன்றனிடம், ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்தபொழுதும், சிகிச்சைக்கு சென்றிருந்தபொழுதும்அவருடைய உடல்நிலை எப்படி இருந்தது என்பதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது.

JAYALALITHA

மேலும் அந்த விசாரணையில் போயஸ் கார்டனில் பணியாற்றிய31 பேர்கள் அடங்கிய பட்டியலையும் பூங்குன்றன் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.தொடர்ந்து, பணியாற்றியவர்களிடமும்விசாரணை நடைபெற்றது.

இதுவரை நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மீண்டும் அவரிடம் விளக்கம்பெறவேண்டி விசாரணைஆணையம் உத்தரவிட, இரண்டாவது முறையாக பூங்குன்றன் இன்று விசாரணைக்குஆஜரானர்.

jayadeath jayalalitha jayalalitha sasikala high Court Judge Arumugasamy sasikala
இதையும் படியுங்கள்
Subscribe