Skip to main content

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் மறுப்பு

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

Jayakumar's bail plea dismissed

 

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில், ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பு அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

தேர்தல் முறைகேடுகளை தடுக்கக்கோரி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக  இன்று காலை ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கின் மீதான ஜாமீன் மனு நாளை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்