ADVERTISEMENT

ஆளுநர் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறார்: ஜெயக்குமார்

10:42 AM Jul 05, 2018 | Anonymous (not verified)


ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆளுநர் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கமல், ரஜினி என யார் வந்தாலும் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. ரஜினியும், கமலும் தமிழகத்தில் வறட்சியை தான் கொண்டுவருவார்கள். தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டப்படி தான் ஆளுநரும் அரசும் நிர்வாகம் செய்கிறது. நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் செயல்படுகிறார். யாரும் எந்த விதிமுறையையும் மீறவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசி வருகிறார். பொறுப்பு ஆளுநர் இருந்த போது, நிலையான ஆளுநர் வேண்டும் என கூறினார். இப்போது நிலையான ஆளுநர் நியமிக்கப்பட்ட பிறகு செயல்பாடு சரியில்லை என குறை கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT