அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, திமுக குழப்பமான கட்சி. அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் குழப்பவாதி என்று கூறிய அவர், அந்த குழப்பங்களுக்கு ஸ்டாலினின் முதல்வர் கனவுதான் காரணம் என்று தெரிவித்தார்.
மேலும் முதல்வர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள், நித்யானந்தா மாதிரி ஒரு புதிய தீவை வாங்கி அங்கு முதல்வர் ஆகி கொள்ளுங்கள், எங்களுக்கு ஆச்சேபனை இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் முதல்வர் ஆக முடியாது. தமிழகத்தில் அதிமுகவால் மட்டுமே முதல்வர் ஆக முடியும் என தெரிவித்தார்.