Advertisment

’’பரட்டை பத்த வச்சது...’’- ரஜினி பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

j

Advertisment

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, ஆடை இல்லாத ராமன் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று செருப்பால் அடித்தார். அதை அப்போது எந்த பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை. ஆனால், சோ மட்டும் துணிந்து பிரசுரித்தார். இதனால் அப்போதைய முதல்வர் கலைஞருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து துக்ளக் பத்திரிகை முழுவதும் பறிக்கப்பட்டது. ஆனாலும் அசராத சோ, மீண்டும் புக் பிரிண்ட் செய்து பிளாக்கில் விற்று பிரபலம் ஆனார் என்று சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ’’பரட்டை பத்த வச்சது இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த். பழைய கருத்துகளைப் பேசி இருக்கக்கூடாது. எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும். இந்தப் பேச்சை அவர் தவிர்த்திருக்க வேண்டும்’’ என்றார்.

jayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe