Skip to main content

"டேய் நித்யானந்தா பொம்பள பின்னாடி ஏன் ஒளிஞ்சிகிட்டு இருக்க.." - நித்திக்கு சாபம் வி்ட்ட ஜனார்த்தன சர்மாவின் மனைவி!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020


பெங்களூருவை சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவர் நித்யானந்தாவுக்கு ஆதரவாக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தவர். நித்யானந்தா மீதிருந்த மரியாதையால் அவர் மனைவி, மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் நித்யானந்தாவை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். சர்மாவின் மூன்று பெண் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு பேரும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் படிப்புக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு அவர்கள் மாற்றப்பட்ட செய்தியறிந்த ஷர்மா, அங்கு மகள்களை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது ஆசிரமத்தில் உள்ளவர்கள், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.

 

j



பின்னர் காவல்துறையின் உதவியுடன் ஒரு மகளை அவர் அழைத்து வந்துவிட்டார். ஆனால் அவர்களது மூத்த மகள்களான லோபமுத்ரா ஜனார்த்தனா சர்மா (21) மற்றும் நந்திதா (18) ஆகியோர் வர மறுத்துவிட்டனர். இதையடுத்து ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தங்களது இரண்டு மகள்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதுடன், அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜனார்த்தன ஷர்மா தம்பதியினர் கோரிக்கையும் வைத்திருந்தனர்.இந்நிலையில் ஜனார்த்தன சர்மாவின் அம்மா நேற்று நேரலையில் தோன்றி நித்யானந்தாவை கடுமையாக திட்டியுள்ளார். மேலும் தங்களுடன் வர மறுக்கும் தன்னுடைய மகள்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

yui



இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " ஏய், நந்திதா, லோபமுந்திரா அவன் (நித்யானந்தா) சொல்றத தான் கேட்பீங்களா, நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்க. ஆனா அப்பாவ பத்தி எதுக்கு தப்பா பேசிறீங்க. அவர் என்ன நித்யானந்தா மாதிரி பொம்பள பின்னாடி ஒளிஞ்சிகிட்டா இருக்காரு. பேச்சுக்கு பேச்சு ஜனார்த்தன சர்மா என்று எதற்காக பேசுகிறீர்கள். நீங்கள் தப்பு செய்யுறீங்க. அவன் நல்லவன் இல்லை. நான் வயிறு எரிஞ்சி சொல்றேன். டேய் நித்யானந்தா பொம்பள பின்னாடி எதுக்காக ஒளிஞ்சிகிட்டு இருக்க. எங்கள மாதிரி வெளிப்படையா இரு. நீயும், ரஞ்சிதாவும் வெளியில வர வேண்டிதானே, எதுக்கு யாருக்கும் தெரியாம ஒளிஞ்சுகிட்டு இருக்கீங்க. ஏதுக்காக பயப்படுறீங்க. உங்க மேல தப்பு இருக்கிறதால தானே? டேய் நித்யானந்தா நீ நல்லாவே இருக்கமாட்டே, அழிஞ்சி போயிடுவ, இது என்னுடைய சாபம்" என்று அவர் பேசியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர் சர்ச்சையில் பாஸ்கரானந்தா; பழங்கால முருகன் சிலை பறிமுதல்

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Bhaskarananda in serial controversy; Seizure of ancient Murugan idol

 

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ஆசிரமத்தை இடித்து விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் பாஸ்கரானந்தா. பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், நான் தான் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறினார். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகச் சிலைகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் வெளிநாடுகளில் அவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது. காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் கோவை பாஸ்கரானந்தா சாமியார் வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். 

 

3 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட இந்த சோதனையில் 200 கிலோவிற்கும் அதிகமான எடையுடன் 4 அடி உயரம் கொண்ட ஐம்பொன் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலை வைத்திருப்பதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் காவல்துறையினர் அதனைக் கைப்பற்றிச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். 

 

கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சிலையை ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப் பிரியா சிலையின் தொன்மையினை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோகச்சிலைகள் பாதுகாப்பு மையத்தில் அந்தச் சிலை ஒப்படைக்கப்பட்டது.

 

 

Next Story

“எனக்கு வாழ்வாதாரம் போச்சு..திருவோடு வாங்கி கொடுங்க பிச்சை எடுக்குறேன்” ஆசிரமத்தை இடித்ததாக புகாரளித்த பாஸ்கரானந்தா

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

baskaraanadha cry for his aashrama

 

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கர்ணம்பேட்டை பகுதியில் செல்வக்குமார் என்பவரது இடத்தில் பாஸ்கரானந்தா என்பவர் ஆசிரமம் ஒன்றை கட்டி வருகிறார். வெளியூரில் இருந்த பாஸ்கரானந்தாவிற்கு ஆசிரம கட்டிடம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. 

 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் தனது ஆசிரமம் தரைமட்டமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பல்லடம் காவல்நிலையத்திற்கு தனது பக்தர்களுடன் சென்று புகாரளித்தார். மேலும் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த பாஸ்கரானந்தா வாகனங்களில் ஏராளமான பக்தர்களை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல் துறை உயர் அதிகாரி எச்சரித்துள்ளார். அவரிடம் பேசிய பாஸ்கரானந்தா, “ஐயா நான் நாலு நாளா சாப்பிடலங்கையா. நான் போய் பிச்சை எடுக்கிறதா. திருவோடு வாங்கி கொடுங்க பிச்சை எடுக்குறேன். நான் இததான் கேட்க முடியும்.

 

எனக்கு வாழ்வாதாரம் போச்சு. என் மனநிலைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க. என் உயிர் போறதுக்குள்ள நீங்க காப்பாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் காவல்துறைய நம்பி வந்துருக்கேன். தயவு செஞ்சி ஆன்மீகத்துல இருக்குறவன ரோட்ல நின்னு அழுக வைக்காதீங்க” எனக் அழுதுகொண்டே கூறும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.