jan 29th cm discussion with doctors team and district collectors

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பிப்ரவரி மாதத்தில் மேலும் சில தளர்வுகளை அளிப்பது, பள்ளிகளைத் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஜனவரி 29- ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

ஜனவரி 29- ஆம் தேதி அன்று காலைசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்று மதியம் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Advertisment

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழு அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டிப்பதா அல்லது மேலும் சில தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.