Skip to main content

திருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!

Published on 16/01/2019 | Edited on 16/01/2019

 

Jallikattu started in Trichy !

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

 

 

இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது. இதனையடுத்து இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 

 

அதே போல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள  சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த  ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்