Skip to main content

கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை... நிர்வாகிகள் மீது வழக்கு... மக்கள் மறியல்!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் ஜனவரி 22ந் தேதி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு வருவாய்த்துறை கண்காணிப்பில் காவல்துறை பாதுகாப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் அக்கிராமத்தை சுற்றியுள்ள சில கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான காளைகள் கலந்துக்கொண்டன.

 

Jallikattu bull that fell into the well ... sued the executives ... People stir!


சின்னபள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமன் என்பவரின் காளைமாடு, ஜல்லிக்கட்டில் கலந்துக்கொண்டது. இதனை வீரர்களால் பிடிக்க முடியவில்லை. மைதானத்தை விட்டு ஓடியது காளை. இந்நிலையில் இந்த காளை அருகில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த காளையை கிணற்றில் இருந்து காளையின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்டு அடக்கம் செய்துள்ளனர்.

அந்த காளை கிணற்றில் தவறி விழுந்ததை அறிந்த வருவாய்த்துறையினர் இதுப்பற்றி காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி தாலுக்கா காவல்நிலையத்தில், போட்டி நடத்திய நிர்வாகிகள் பூபாலன், சங்கர் மற்றும் பழனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Jallikattu bull that fell into the well ... sued the executives ... People stir!

 

இதனால் அவர்கள் அதிர்ச்சியாகினர். ஊருக்காக தானே விழா நடத்தினோம் இப்போ பாருங்க, எங்கள் மீது வழக்குபதிவு செய்துயிருக்காங்க எனச்சொல்ல இதனை கண்டித்து வாணியம்பாடி ஆலங்காயம் சாலையில், அக்கிராமத்தினர் ஜனவரி 23ந் தேதி காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு சாலையில் கற்களை உடைத்து எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியல் செய்த மக்களை சமாதானம் செய்து மறியலை கைவிட வைத்தனர்.

மைதானத்தில் எதுவும் நடக்கவில்லை, மைதானத்தில் அசம்பாவிதம் நடந்திருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்ளலாம். இது மைதானத்துக்கு வெளியே நடைபெற்றது. இதற்கு போட்டி நடத்திய நாங்கள் எப்படி காரணமாக முடியும் என கேள்வி எழுப்பியுன்னர் அதிகாரிகளிடம். தற்போது இது தொடர்பாக காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.