Skip to main content

ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்!  ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி!!

Published on 26/01/2019 | Edited on 26/01/2019
ra

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திண்டுக்கலில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது,  ‘’தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார்கள்.  அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.  காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ போராட்டக் குழு கடந்த நான்கு நாட்களாக போராடி வருகிறது.   

 


 தமிழக அரசு உடனடியாக போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.  மாறாக போராட்டத்தை உடைப்பதற்காக தவறான பாதையில் மாநில அரசு செல்கிறது.  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மிரட்டும் வகையில் நோட்டீஸ் கொடுப்பதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக மட்டும் 7,500 ரூபாய் சம்பளத்திற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.    இந்தப் போராட்டத்திற்கு காரணம் மாநில அரசுதான்.  கடந்த நவம்பர் மாதத்தில் ஜாக்டோ ஜியோ இணைந்து டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக நவம்பர் மாதமே அறிவித்தது.  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க மூன்று முறை போராட்டத்தை ஒத்திவைத்தனர்.  ஆனால் நீதிமன்றத்தில் அரசு எந்தவித உருப்படியான ஆலோசனைகளையும் வழங்கவில்லை. கடைசியாக நீதிபதியே உங்கள் போராட்டத்தை தொடருங்கள் என்று சொல்லிவிட்டார். மாணவர்களின் கல்வி உட்பட அனைத்து பாதிப்புகளுக்கும் தமிழக அரசுதான் பொறுப்பாகும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி அந்த மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர்கள் உள்ளனர். எனவே மாநில அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழலில் சிக்கியவர்களை காப்பாற்ற நாடகமாடுகிறார் மம்தா பானர்ஜி - ஜி.ரா. பேட்டி

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
g.ramakrishnan


ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர்களும், அதிகாரிகளையும் காப்பாற்றும் நோக்கில் முதல்வர் மம்தா பானர்ஜி நாடகமாடுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் நிலைமையை பொறுத்தவரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை என்பது பாஜகவை தோற்கடிப்போம். தேசத்தை பாதுகாப்போம். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரசை தோற்கடிப்போம். மேற்கு வங்கத்தை பாதுகாப்போம் என்பதுதான் எங்களுடைய முழக்கம். 
 

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட சாரதா சிட் பண்ட் ஊழலில் சிக்கியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நேற்று மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் சார்பாக மகத்தான பேரணி நடைபெற்றது. அதை திசைத்திருப்ப வேண்டும் என்பதற்காக நாடகமாடியிருக்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் முன்னணியில் இருக்கும். மேற்குவங்கத்தில் ஊழலில் சிக்கியுள்ள திரிணாமூல் காங்கிஸ் கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளையும் காப்பாற்றும் நோக்கில் முதல்வர் மம்தா பானர்ஜி நாடகமாடுகிறார். இவ்வாறு கூறினார். 
 

 

 

Next Story

ஜி.ராமகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை 

Published on 23/08/2018 | Edited on 23/08/2018
ra


நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

 

நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவி அனிதா மரணத்திற்கு நியாயம் கேட்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிந்தாதிரிப் பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மீது சிந்தாரிபேட்டை காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தனர்.

 

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.ராமகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி பி.என். பிரகாஷ் முன்பு  விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜி.ராமகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல்துறையை தாக்கியதாகவும், சட்ட விரோதமாக கூடியதாகவும் பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளதாக வாதிட்டார். 

இதனை ஏற்ற நீதிபதி, எழும்பூர்  நீதிமன்றத்தில்  ஜி.ராமகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.