Skip to main content

அடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

ஆட்குறைப்பு என்ற நிலையில் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 3500 தொடக்க பள்ளிகளை இணைத்து அதன் வாயிலாக 3500 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்   பணியிடங்களை, 3500 சத்துணவு  அமைப்பாளர்களை, 3500 சமையலர்களை, 3500 உதவியாளர்களை, பணியிட குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது அரசாங்கம். அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜீ வகுப்புகளை ஆரம்பித்து அதில் தொடக்க கல்வியில் பணிபுரியும் 2381 இடைநிலை ஆசிரியர்களை சமூகநலத்துறைக்கு தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும்.

 

protest

 

1.பங்களிப்பு ஓய்வுதியத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய முறையினை நடை முறை படுத்திட வேண்டும்.

 

2. ஏழாவது ஊதிய குழுவின் முரண்பாடுகளை களையும் நோக்கில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்குஇணையான சம்பளத்தை தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்குவழங்கிட வேண்டும் .

 

3. ஏழாவது ஊதிய குழுவின் 21மாதநிலுவை தொகையை வழங்கிட வேண்டும்

 

4. 2004 முதல் 2006வரை ஆசிரியர்களின் தொகுப்பு ஊதிய காலத்திற்கு  காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் !

 

5. சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் ,அங்கன்வாடி பணியாளர்கள் ,நூலக ஊழியர்கள் ,சுகாதாரதுறை ஊழியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்

 

6.ஆட்குறைப்பு செய்யும் அரசாணை எண் 56  தொடக்கபள்ளிகளை மூட இருக்கும் அரசாணை100,நிர்வாக சீர்கேடுகளைஏற்படுத்தி அதிகாரகுவியலை உருவாக்கி ஆசிரியர்களை பழிவாங்க வழிவகுக்கும் அரசாணை 101 போன்றவற்றை ரத்து செய்திட வேண்டும்!

 

7.ஆட்குறைப்பு என்ற நிலையில் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 3500தொடக்க பள்ளிகளை இணைத்து அதன்வாயிலாக 3500 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்   பணியிடங்களை, 3500 சத்துணவு  அமைப்பாளர்களை, 3500 சமையலர்களை, 3500 உதவியாளர்களை, பணியிட குறைப்பு செய்வதை தடுக்கவேண்டும்.

 

8.அரசுநடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜீ, யூ.கே.ஜீ வகுப்புகளை ஆரம்பித்து அதில் தொடக்ககல்வியில் பணிபுரியும் 2381 இடைநிலை ஆசிரியர்களை !சமூகநலத்துறைக்கு தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும்  போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ மூலம் சுமார் 14 இலட்சம் ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர்கள் ஜனவரி 18ந்தேதி மாலை தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

தொடர்ந்து, 22-1-19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தல்   என்று தீர்மானித்துள்ளனர். 22-1-19 அன்று அனைத்துவகை பள்ளிகள் அரசு அலுவகங்கள் 100% மூடப்படவேண்டும் !அதே நாளில் அந்தந்த வட்ட தலைநகர்களில் கோரிக்கை ஆர்பாட்டம் காலை 10 மணிக்கு நடந்திட வேண்டும். 23-1-2019 24-1-2019 ஆகிய இரண்டுநாட்கள் வேலை நிறுத்தம் செய்து மறியல் போராட்டம் காலை 10மணியளவில் நடத்திட வேண்டும், 25-1-2019 அன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டு மாவட்ட தலைநகர்களில் காலை 10.00மணிக்கு மறியல் போராட்டம்  நடத்திட வேண்டும் என மாவட்ட குழுக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

 

வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய தமிழக அரசை போராட்டங்களின் மூலம் திணற செய்யவேண்டும், அரசு இயந்திரங்கள் ஸ்தம்பிக்க செய்யவேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .