Skip to main content

நாளை ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடிவு...!

Published on 25/01/2019 | Edited on 25/01/2019

 

jj

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பல்வேறு ஊழியர் சங்கங்கள் எல்லாம் இணைந்து கடந்த 22-ம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து, சாலை மறியல், முற்றுகை போராட்டங்களாக மாறி கைது நடவடிக்கைகள் வரை நடந்து வருகிறது.

 

இந்த நிலையில் அரசு பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் அரசு பேச்சுவார்த்தைகளில் உடன்பாடுகள் ஏற்படாத நிலையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 


அதேபோல் பல்வேறு அரசு ஊழியர்கள், பணியாளர்கள் சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் தமிழக அரசு வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவில்லை. 

 


இந்த நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு அனைவரும் பள்ளிக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். ஆனால் குடியரசு தினம் முடிந்த பிறகு மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்கின்றனர் ஆசிரியர்கள். ஞாயிறு, விடுமுறை நாள் முடிவதற்குள் எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால் திங்கள் கிழமை முதல் மீண்டும் வேலை நிறுத்தம் தொடரும் என்றனர்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த முதல்வர்; ஜாக்டோ - ஜியோ போராட்டம் வாபஸ்!

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Chief Minister who promised Jacto - Jio struggle action withdrawn

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த சூழலில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் நேற்று (13.02.2024) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும். கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும், 15 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (14.2.2024) ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன், வெங்கடேசன், நேரு, தியோடர் ராபின்சன், தாஸ், பொன்னிவளவன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அப்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். இதனையடுத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, “கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்வரே அழைத்து பேசியதால் எங்கள் நம்பிக்கை நீர்த்துப் போகவில்லை. எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்ததன் அடிப்படையில் நாளை நடைபெற இருந்த ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம் ” எனத் தெரிவித்தனர். 

Next Story

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Jacto Geo struggle calls for cancellation of new pension scheme

வேலூர்  சத்துவாச்சாரியில்  உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த முறையைக் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையானது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக வந்து 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் வாகனங்களில் அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.