ADVERTISEMENT

ஜெ. சொத்துக்களின் பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

12:53 PM Aug 28, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துக்களையும் உடனடியாக ஏலம் விட வேண்டும் எனக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தார்.

அந்த வழக்கின்படி, பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்திருந்தது. அதன்படி சொத்துக்களை ஏலம் விடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வகையான சொத்துக்களின் பட்டியல் நீதிமன்றத்திலும் வழங்கப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT